ஆந்திரா பெசரட்டு

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#Lockdown2
#book
அரிசியும் உளுந்தையும் சேர்த்து தோசை வார்ப்போம் ஆனால் இது பச்சை பயிறில் சுடும் தோசை இதற்கு ஆந்திரா பெசரட்டு என்று பெயர் எப்பொழுதும் போல தோசை போல இல்லாமல் வித்தியாசமாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 டம்ளர் பச்சைப்பயிறு
  2. 2 ஸ்பூன் பச்சரிசி
  3. 1 கைப்பிடி உளுந்து
  4. இஞ்சி சிறிதளவு
  5. 4 பச்சை மிளகாய்
  6. ஒரு ஸ்பூன் சோம்பு
  7. ஒரு பெரிய வெங்காயம்
  8. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதல் நாள் இரவே பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் ஒன்றாக கலந்து நன்றாக கழுவிவிட்டு ஊற வைத்துக் கொள்ளவும். உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுத்த நாள் காலை கிரைண்டரில் பச்சைப்பயிறு பச்சரிசி உளுந்து போட்டு அரைக்கவும்.மிக்ஸியில் பச்சை மிளகாய் இஞ்சி வெங்காயம் சோம்பு அரைத்து கிரைண்டரில் போட்டு விடவும்.

  3. 3

    பச்சைப்பயிறு போட்டவுடனே மாவு பொங்கி விரும். உடனே எடுக்க வேண்டாம் சிறிது நேரம் நன்கு ஆட்டவும். அரை மணி நேரமாவது ஆட்டவேண்டும் அப்பொழுதுதான் தோசை நன்றாக வரும் கடைசியில் உப்பையும் போட்டு அரைத்து விடவும் பிறகு பாத்திரத்திற்கு மாற்றவும்.

  4. 4

    தோசைக்கல்லை சூடு செய்து தோசை ஊற்றவும் இந்த மாவு புளிக்க தேவையில்லை ஆட்டி உடனே ஊற்றலாம். மேலே சிறிது வெங்காயத்தை தூவி தோசையை சுட்டு எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள இஞ்சி சட்னி நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes