செட்டிநாடு கார சட்னி(Chettinadu kaara chutney recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#GA4
செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரசிததமானது. நல்ல காரசாரத்துடன் இருக்கும்.இனிப்பு வகைகள் பல பாரம்பரியமானவை .தீனி வகைகளும் அது போலவே..ஒவ்வொரு விஷேஷகள் மற்றும் பண்டிகால உணவுகள் கட்டாயம் அவர்களுடைய பாரம்பரிய உணவாகத் தான் இருக்கும்.என் தோழி காரைக்குடி ஊரை சேர்த்ந்த்வர்.நகரத்தார் பழக்க வழக்கங்களை ஒன்று விடாமல் கடை பிடிக்கும் மும்பைவாசி ஆவார்.அவர் மூலம் நிறைய விஷயங்கள் செட்டிநாடு சமையல், பழக்க வழக்கங்கள் பற்றி நான் நிறைய அறிந்துள்ளேன்.மேலும் அவர்கள் அசைவ உணவு வகைகளை செய்வதிலும் கை தேர்ந்தவர்கள். இன்று செட்டி நாட்டு கார சட்னி செய்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பேர்
  1. 150 கிராம் சின்ன வெங்காயம்
  2. 2 மீடியம் அளவு பெரிய வெங்காயம்
  3. 3சிறிய அளவு பழுத்த தக்காளி
  4. 6 வரமிளகாய்
  5. 4காஷ்மீரி மிளகாய் அல்லது
  6. 1.5 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  7. 5 பல் பூண்டு
  8. 1/2 ஸ்பூன் சீரகம்
  9. சிறிய துண்டுவெல்லம்
  10. நெல்லிக்காய் அளவுபுளி
  11. தேவையான அளவுஉப்பு
  12. 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  13. 1 ஸ்பூன் கடுகு
  14. 1 கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    150 கிராம் வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும் (ஒரு பெரிய கப் அளவிற்கு) இரண்டு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை ஒன்றிரண்டா அரிந்து கொள்ளவும். புளி ஒரு நெல்லிக்காய் அளவு தண்ணீரில் ஊறவைத்து வைத்துக் கொள்ளவும். 5 அல்லது 6 பல் பூண்டு தோலுரித்து வைத்துக் கொள்ளவும். 3 மீடியம் சைஸ் தக்காளியை நான்காக அரிந்து கொள்ளவும். 6வரமிளகாய் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நல்ல சிவப்பு நிறத்திற்கு காஷ்மீரி மிளகாய்4எடுத்து கொள்ளவும்.என்னிடம் காஹ்மீரி மி.தூள் தான் இருந்தது.அதை சேர்த்து கொண்டேன்

  2. 2

    கல் உப்பு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் சீரகம் எடுத்துக்கொள்ளவும். மேல்கூறிய எல்லாவற்றையும் மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு ஒரு அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் நிறைய சேர்த்துக்கொள்ளவும். காய்ந்தவுடன் அதில் கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். அதன் பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும். 10 நிமிடம் வரை மூடி வைத்து மிதமான தீயில் வைக்கவும்.

  4. 4

    இரண்டு மூன்று நிமிடம் வதக்கினால் பச்சை வாசசட்னி போல் இருக்கும். 5 நிமிடத்திற்கு மேல் மூடி வைத்தால் சட்னி போல இருக்கும். மேலும் 5 நிமிடம் மூடி வைத்தால் எண்ணெய் பிரிந்து தொக்கு பதத்திற்கு வரும். இவற்றை வெளியில் வைத்து 3,4 நாட்கள் வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இட்லி தோசைக்கு நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். இரண்டு செல்லும்போது எடுத்துக்கொள்ள தோதாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes