எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 11\2கப் சீரக சம்பா அரிசி
  2. 5முட்டை
  3. 4துண்டு பட்டை
  4. 5கிராம்பு
  5. 2துண்டுஜாதிப்பத்ரி
  6. 2பூ
  7. 2ஏலக்காய்
  8. 2டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. 21\2பெரிய வெங்காயம்
  10. 1பெரிய தக்காளி
  11. 2பச்சை மிளகாய்
  12. 2கைப்பிடி புதினா
  13. 1கைப்பிடி கொத்த மல்லி
  14. 2கொத்து கறிவேப்பிலை
  15. 1பின்ச் குங்குமப்பூ
  16. சிறிதளவுபால்
  17. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  18. 1\2ஸ்பூன் மல்லித் தூள்
  19. 1\4ஸ்பூன் சீரகத் தூள்
  20. 1ஸ்பூன் கரம்மசாலா
  21. 1\4கப் நெய்
  22. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  23. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    சீரக சம்பா அரிசியை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொள்ளவும். (அதாவது நாம் எடுத்த அரிசியை விட நான்கு பங்கு அளவு தண்ணீரை கொதிக்க விடவும்)

  2. 2

    நன்கு கொதி வந்ததும் பட்டை, பூ, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி இவைகளை தண்ணீரில் சேர்க்கவும். சாதத்திற்கு தேவையான அளவு உப்பு மட்டும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  3. 3

    பிறகு தண்ணீர் வடித்து விட்டு அரிசியை சேர்க்கவும்

  4. 4

    அரை பதம் அளவு மட்டுமே அரிசியை வேக விடவும். வெந்ததும் அதனை ஒரு வடிகட்டியில் தண்ணீரை தனியே வடிகட்டி விடவும்

  5. 5

    ஐந்து முட்டையை அவித்து, உரித்து எடுத்துக் கொள்ளவும். அரை பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதை பொன்னிறமாக பொரித்து தனியே ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    அதே கடாயில் எண்ணெய்யும், நெய்யும், சம அளவு ஊற்றி நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாயை முதலில் வதக்கி, பிறகு நீளவாக்கில் நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை வதக்கி விடவும்

  7. 7

    வெங்காயம் நன்கு வதங்கியதும் நீளவாக்கில் நறுக்கிய 1 தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு கழுவி தண்ணீர் வடித்த, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்க்கவும்

  8. 8

    அடுப்பை குறைத்து வைத்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு, பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதனையும் நன்கு ஒரு சேர சிறிது நேரம் வதக்கி விடவும்

  9. 9

    இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித் தூள், சீரக தூள் சேர்த்து கிளறி விடவும்

  10. 10

    பிறகு கரம் மசாலா சேர்த்து நன்கு பச்சை வாடை போக வதக்கவும். அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வர விடவும்

  11. 11

    கொதி வந்ததும் மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும் (முதலிலேயே நாம் அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து விட்டதால் இதில் அரை உப்பு மட்டுமே சேர்க்கவும்) சுற்றிலும் உள்ள மசாலா அனைத்தையும் சேர்த்து நடுவில் வைக்கவும். மசாலா முதல் அடுக்கு.

  12. 12

    தண்ணீரை வடித்து வைத்த உதிரி சாதத்தை இரண்டாவது அடுக்காக வைக்கவும். இதன் மேலே குங்குமப்பூவை சிறிது பாலில் சேர்த்து கரைத்து அதற்கு மேல் ஊற்றவும்

  13. 13

    மூணாவது அடுக்காக அவித்த முட்டையை வைக்கவும். நாலாவது அடுக்காக பொரித்த வெங்காயத்தை தூவி விடவும்

  14. 14

    அப்படியே அதன் மேல் ஒரு அலுமினியம் பாயில் பேப்பரை கொண்டு மூடி விடவும். அதற்கு மேல் ஒரு தட்டு கொண்டு மூடவும்

  15. 15

    அடுப்பில் குறைந்த தணலில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மீது இந்த கடாயை மூடி உடன் எடுத்து வைக்கவும். குறைந்த தணலில் தோசைக் கல்லில் கடாயை 15 முதல் 20 நிமிடங்கள் வைத்து இறக்கவும். பிறகு மூடியை மெதுவாக திறந்து பேப்பரை நீக்கிவிட்டு மெதுவாக கிளறி விட்டு சூடாகப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes