தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 நபர்கள்
  1. 1 கப் பொன்னி பச்சரிசி
  2. 1/2 கப் பாசிப்பருப்பு
  3. 4 டேபிள் ஸ்பூன் நெய்
  4. 1/2 லிட்டர் பால்
  5. தேவையானஅளவு முந்திரி
  6. தேவையானஅளவு கிஸ்மஸ்
  7. 1/2 கிலோ மண்ட வெல்லம்
  8. 4 கப் தண்ணீர்
  9. 4 ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் அரிசி மற்றும் பருப்பை 15 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும்.

  2. 2

    ஒரு குக்கரில் 4 கப் தண்ணீர், உப்பு மற்றும் ஊறவைத்த அரிசியை நன்கு கழுவி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    குக்கரை மூடி 4 விசில் வைத்துக்கொள்ளவேண்டும்.

  4. 4

    பிறகு குக்கரை திறந்து சாதத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

  5. 5

    அதன் பிறகு ஏலக்காய் தூள் மற்றும் பொடித்த மண்டை வெல்லம் சேர்த்து நன்கு சாதத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

  6. 6

    பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  7. 7

    ஒரு பானில் 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கிஸ்மிஸ் மற்றும் முந்திரி சேர்த்து தாளித்து பொங்கலில் சேர்த்து விட வேண்டும்.

  8. 8

    நன்கு கலந்த பிறகு 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து பரிமாறினால் சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes