நொய் அரிசி உப்புமா(NOI ARISI UPMA RECIPE IN TAMIL)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#ed3 # இஞ்சி
அரிசி மாவை விதவிதமாக வேறு மாதிரி செய்யலாம். ஆவியில் வேக விட்டு செய்யலாம். அடையாக தட்டி செய்யலாம் .தேங்காய் சேர்க்காமல் செய்யலாம். கடலை மாவு சேர்த்து செய்யலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்யலாம். இப்படி பல வகையாக பச்சரிசி கொண்டு அரிசி உப்புமா செய்யலாம் எப்படி செய்தாலும் அரிசி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். நாங்கள் முக்கியமாக இதை விரத நாட்களில் இரவு உணவிற்கு செய்வோம். அன்று புழுங்கலரிசி சாப்பிடமாட்டோம். இன்று பச்சை நோய் அரிசியில் இஞ்சி சேர்த்து தேங்காய் சேர்த்து இந்த அரிசி உப்புமா செய்தேன்.

நொய் அரிசி உப்புமா(NOI ARISI UPMA RECIPE IN TAMIL)

#ed3 # இஞ்சி
அரிசி மாவை விதவிதமாக வேறு மாதிரி செய்யலாம். ஆவியில் வேக விட்டு செய்யலாம். அடையாக தட்டி செய்யலாம் .தேங்காய் சேர்க்காமல் செய்யலாம். கடலை மாவு சேர்த்து செய்யலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்யலாம். இப்படி பல வகையாக பச்சரிசி கொண்டு அரிசி உப்புமா செய்யலாம் எப்படி செய்தாலும் அரிசி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். நாங்கள் முக்கியமாக இதை விரத நாட்களில் இரவு உணவிற்கு செய்வோம். அன்று புழுங்கலரிசி சாப்பிடமாட்டோம். இன்று பச்சை நோய் அரிசியில் இஞ்சி சேர்த்து தேங்காய் சேர்த்து இந்த அரிசி உப்புமா செய்தேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. ஒரு கப் பச்சை நொய்யரிசி
  2. கால் கப் துவரம்பருப்பு
  3. அரை ஸ்பூன் சீரகம்
  4. அரை ஸ்பூன் மிளகு
  5. கால் கப் துருவிய தேங்காய்
  6. ஒரு ஸ்பூன் இஞ்சி துண்டுகள்
  7. 4 பச்சை மிளகாய்
  8. இரண்டு வரமிளகாய்
  9. கால் ஸ்பூன் பெருங்காயத்தூள்
  10. 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  11. ஒரு ஸ்பூன் கடுகு
  12. முக்கால் ஸ்பூன் கடலை பருப்பு
  13. முக்கால் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  14. சிறிதளவுகறிவேப்பிலை
  15. இரண்டரை கப் தண்ணீர்
  16. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மேற்கூறிய அளவுகளில் அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசி பருப்பு சீரகம் மிளகு அனைத்தையும் மிக்ஸியில் பெரும் ப உடைப்பாக உடைத்துக் கொள்ளவும், படத்தில் காட்டியுள்ளபடி.

  2. 2

    ஒரு ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் எடுத்து வைத்துக் கொள்ளவும் துருவிய தேங்காய் எடுத்து வைத்துக் கொள்ளவும் பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். வரமிளகாய் 2 முழுதாக எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    பிரஷர் பானிள் அல்லது வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் கடுகு சேர்த்து பொரியவிடவும் பிறகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் இஞ்சி கருவேப்பிலை பச்சைமிளகாய் வரமிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும் பிறகு ஒரு கப் அளவிற்கு இரண்டரை கப் அளவு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். இப்போது தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தேங்காய் துருவலை அதில் சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    ரவையாக உடைத்த அரிசியை தண்ணீர் நன்கு கொதித்தவுடன் (சிம்மில் அடுப்பை வைத்து) கட்டி இல்லாமல் கொட்டி நிதானமாக கிளறிவிடவும். இப்போது தேவை என்றால் மேலும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு குக்கர் மூடி கொண்டு வெயிட் சேர்த்து சிம்மில் வைத்து 20 நிமிடம் வரை வேக விடவும். பிறகு அடுப்பை நிறுத்தி விடவும். ஆவி அடங்கியவுடன் குக்கர் மூடியைத் திறந்து கரண்டி கொண்டு நன்கு கிளறி விடவும். சுவையான விரதத்திற்கு ஏற்ற அரிசி உப்புமா ஜீரணமாகும் வகையில் இஞ்சி மிளகு சீரகம் சேர்த்து தயார்.

  5. 5

    இதற்கு புளிக்காய்ச்சல், சர்க்கரை, வெல்லம், வைட் சட்னி, தயிர், பச்சை புளி போன்றவை தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes