தேங்காய் சுடும் நோம்பி ஆடி 1(thengai suttathu recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

# சேலத்தின் மிக முக்கியமான பண்டிகை இந்த தேங்காய் சுடும் பண்டிகை. ஆடி மாதம் பிறந்த அன்று இந்த பண்டிகை கொண்டாடுவோம் ஆடி வந்து விட்டாலே சேலம் மிகவும் களைகட்டி விடும். எல்லா முக்கியமான பகுதிகளிலும் அந்தந்த மாரியம்மன் கோவிலில் இந்த 30 நாளும் மிகவும் விசேஷமான பூஜைகள் நடக்கும். முதலில் கொடி மரத்திற்கு பூஜை செய்வார்கள். வரிசையாக பூச்சாட்டுகள், கம்பம் நடுதல் , கிராம சாந்தி,சக்தி அழைத்தல், உருள் போடுதல், பொங்கல் வைத்தல் அலகு குத்துதல், மாவிளக்கு ஏற்றுதல் கும்ப பூஜை (அவரவர் வீட்டில்) கடைசியாக தேர் இழுத்தல் போன்றவை நடைபெறும். சில கோயில்களின் பூமிதித்தலும் உண்டு. கடைசியாக வண்டி வேடிக்கை என்று மிகவும் விசேஷமான கொண்டாட்டம் இருக்கும். பிறகு சத்தாபரணம் நடைபெற்று அதன் பிறகு மஞ்சள் நீராட்டு விழா உடன் பண்டிகை முடிவடையும். ஆடி. முதல் தேதி தேங்காய் சுடும் பண்டிகை ஆரம்பமாகும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 தேங்காய்
  1. 2 மீடியம் சைஸ் இளம் தேங்காய்
  2. பூரணம் செய்ய:
  3. 1/2 கப் அவல்
  4. 1/2 கப் வெள்ளை எள் வறுத்தது
  5. 1/2 கப் பாசிப்பருப்பு வறுத்தது
  6. 1/2 - 3/4 கப் நாட்டு சக்கரை
  7. 1/2 கப் பொட்டு கடலை
  8. 2தேங்காய் சுடும் குச்சி

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மேல் கூறிய தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும் கீழ்கண்ட படத்தில் உள்ளது. இரண்டு இளம் தேங்காய்களையும் பீளர் வைத்து சுத்தமாக முடியை எடுத்து விடவும். குடிமையை பிய்த்து விடவும். அந்த காலத்தில் நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த பொழுது சொரசொரப்பான கல்லில் மொக்கு த்தூள் அல்லது செங்கலை நுணுக்கி அதில் தேங்காய் தேய்த்து வழ வழப்பாக்குவோம். பிள்ளைகள் செய்வதில்லை அதனால் கத்திக்கொண்டு சுரண்டி அல்லது இதுபோல் பீலர் வைத்து செய்து விடுகிறோம். பாசிப்பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    எள்ளையும் சிவப்பாக வறுத்துக் கொள்ளவும். இவை இரண்டையும் ஆற விட்டு இதனுடன் அவல், பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக ஓட்டிக் கொள்ளவும். நாட்டு சர்க்கரை சேர்த்து ஒரு சுற்று சுற்றிக்கொண்டு நன்கு கலந்து விட்டுக் கொள்ளவும்.தேங்காயில் சேர்க்கப் போகும் பூரணம் ரெடி. தேங்காயின் மூன்று கண்களில் பெரும் துளையாக இருக்கும் பக்கம் ஒரு கம்பி கொண்டு அல்லது பணியாரம் சுடும் கம்பியால் ஓட்டை போட்டுக் கொள்ளவும். ஓட்டையை சிறிது பெரிதாக்கிக் கொள்ளவும். அப்போதுதான் பூரணம் உள்ளே நிரப்பி குச்சி சொருக முடியும

  3. 3

    தேங்காய் துளையிட்ட பிறகு அதிலுள்ள தேங்காய் தண்ணீரில் பாதி மட்டும் ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும்.மீதி தண்ணீரை தேங்காயிலே இருக்க விடவும்.. பிறகு கைகளை படத்தில் காட்டியுள்ளபடி வைத்துக் கொண்டு பூரணத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு ஒரு பணியார கம்பி கொண்டு குத்தி உள்ளே தள்ளி விடவும். நிரம்பி விட்டால் தேங்காய் உள்ளே இருக்கும் தண்ணீர் வெளியே தெரியும். இப்போது பூரணம் போடுவதை நிறுத்திவிட்டு மீதி தேங்காய் தண்ணீரை அதில் சேர்த்து குச்சியின் கூர்மையான பக்கத்தை சொருகி நன்கு குச்சியை டைட் செய்து விடவும்.

  4. 4

    பிறகு இரண்டு தேங்காய் க்கும், குச்சிக்கும் மஞ்சள் தடவி குங்குமம் வைக்கவும். ஸ்டவ்வில் குச்சியுடன் சேர்த்து படத்தில் காட்டியுள்ள படி மிதமான தீயில் தேங்காயை சுடவும். ஒருமுறை நிமிர்த்திய வாரும், பிறகு சுற்றியும் காட்டி நிதானமாக குச்சி கழண்டு வராமல் தேங்காயை சுட வேண்டும். தேங்காயில் நுனி பாகம் ஓடு உடைந்து தனியாக வரும். தேங்காய் வெந்து விட்டதால அடுப்பை நிறுத்தி விடவும். இந்த குச்சி அப்படியே பிள்ளையார் படத்தின் முன்போ பிள்ளையாரின் முன்போ வைத்து தீபம் ஏற்றி கற்பூரம் காட்டி கும்பிடவும்.

  5. 5

    ஆரிய பிறகு ஓட்டை தனியாக எடுத்துவிட்டு இரண்டாக தேங்காயை கத்தியால் அறுத்துக் கொள்ளலாம். படத்தில் காட்டி உள்ளபடி. பூரணம் நிரம்பி பார்ப்பதற்கே அழகாகவும் சாப்பிடவும் தூண்டும். பூரணம் நிறைவாக நிரம்பி வந்தால் மிகவும் நல்லது. பிறகு இதை மறுபடியும் பிள்ளையாரிடம் வைத்து கும்பிட்டு விட்டு சாப்பிட எடுத்துக் கொள்ளலாம் இளம் தேங்காய் உடன் பூரணத்தை வைத்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

  6. 6

    இது சேலம் மாவட்டத்தில் மட்டும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும் இதன் தாத்பரியம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் ஆடி பிறந்தவுடன் சேலம் தில் மற்ற பண்டிகைகள் மாதம் மாதம் வரிசையாக வந்துவிடும். சிறுவர்கள் கொண்டாடும் பண்டிகை இது சில சிறுவர்கள் பிள்ளையார் கோயிலில் கொண்டு சென்று வைத்து தேங்காயை கும்பிடுவார்கள். பூரணம் இறக்கும் பொழுது கொஞ்சம் சிரமமாக தான் இருக்கும் நிதானமாக கம்பி கொண்டு குத்தி விட்டு பூரணத்தை நன்கு நிரப்ப வேண்டும். மிகவும் ஆரோக்கியமான தேங்காய் பூரணம் இது.

  7. 7

    இங்கு குச்சி பண்டிகை அன்று மார்க்கெட்டில் நுனி சிவி கிடைக்கும்.உங்கள் ஊரில் அது கிடைக்க வில்லை என்றால் தாங்களே இது போன்ற ஒரு குச்சியை எடுத்து நுனியை கூர்மையாக சீவி கொள்ளவும் தேங்காய் கண்களில் சொருகும் அளவிற்கு. சன்னமாக சீவி விட வேண்டாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட் (12)

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes