காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#BR
காராமணி வைத்து பிரியாணி பண்டைய காலத்தில் செய்வது போல் மசாலா அரைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.

காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)

#BR
காராமணி வைத்து பிரியாணி பண்டைய காலத்தில் செய்வது போல் மசாலா அரைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 கப் சீரகம் சம்பா அரிசி
  2. 1 கப் காராமணி
  3. 1 வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. மசாலா அரைப்பதற்கு:
  6. 2பச்சை மிளகாய்1 துண்டு இஞ்சி
  7. 1 துண்டு இஞ்சி
  8. 5 பல் பூண்டு
  9. 5 சாம்பார் வெங்காயம்
  10. 1டீஸ்பூன் சோம்பு1/2 டீஸ்பூன் கசகசா
  11. 1/2 டீஸ்பூன் கசகசா
  12. தாளிக்க:
  13. 1பட்டை, கிராம்பு,ஏலக்காய்
  14. பிரிஞ்சி இலை
  15. 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  16. தேவையான அளவுஉப்பு
  17. 4டேபிள் ஸ்பூன் நெய்
  18. மல்லி இலை
  19. புதினா இலை

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    காராமணியை நன்கு கழுவி
    மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    பின்னர் குக்கரில் தண்ணீர், உப்பு சேர்த்து மூன்று விசில் வைத்து வேகவைக்கவும்.

  3. 3

    பெரிய வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய், மல்லி,புதினா இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  4. 4

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் எடுத்து மிக்ஸியில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    ஒரு ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும்,நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  7. 7

    மசாலா நன்கு வதங்கியதும் காராமணி,ஊற வைத்து வைத்துள்ள சீராக சம்பா அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  8. 8

    அத்துடன் உப்பு சேர்த்து கலந்து விடவும்.

  9. 9

    அதன் பின் ஒன்றே முக்கால் கப் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.

  10. 10

    கடைசியாக மல்லி, புதினா இலைகளை சேர்த்து, எலுமிச்சை சாறு,ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து மூடி வைத்து தண்ணீர் வற்றி வரும் வரை மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

  11. 11

    பின்னர் எடுத்து தோசை தவாவை சூடு செய்து அதன் மேல் வைத்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.

  12. 12

    பத்து நிமிடங்கள் போதும்,பிரியாணி தயாராகிவிடும்.பின்னர் எடுத்து நறுக்கி வைத்துள்ள மல்லி இலை,புதினா இலை, நெய் தூவி இறக்கவும்.

  13. 13

    பின்னர் எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.

  14. 14

    இப்போது மிகவும் சுவையான, சத்தான,ஒரு வித்தியாசமான காராமணி பிரியாணி சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes