சிறுக்கீரை மிளகு பொறியல்

San Samayal @cook_16002311
கீரையை பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீரில் அலசி கொள்ளவும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் கீரை சேர்த்து லேசாக வதக்கவும். மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாது, கீரை நிறம் மாறாமல் வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து இறக்கவும்..
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீரில் அலசி கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் கீரை சேர்த்து லேசாக வதக்கவும். மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாது, கீரை நிறம் மாறாமல் வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து இறக்கவும்..
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

அரைக்கீரை தேங்காய் பொரியல்
அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். தண்ணீரில் நன்கு அலசவும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு, பூண்டு,வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் சேர்க்க கூடாது. வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும்.


சௌ சௌ சட்னி
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்..


கீரைவகை உணவு சிறுக்கீரை மசியல்
சிறுக்கீரை மசியல் 8 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்..கீரையை பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீரில் அலசி கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்,பூண்டு,வரமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். கீரை சேர்த்து லேசாக வதக்கி தண்ணீர் சேர்த்து2 விசில் வைக்கவும். விசில் சத்தம் நின்றதும்,விசிலை தூக்கி ப்ரஷர் ரிலீஸ் செய்தவும். இவ்வாறு செய்தால் கீரை நிறம் மாறாது. நன்கு ஆறியதும் கல் சட்டி அல்லது மிக்ஸியில் அரைக்கவும். குழந்தைகளுக்கு செய்யும் போது வர மிளகாய் சேர்க்க வேண்டாம். தாளிக்க சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,வடகம் போட்டு கீரையில் சேர்த்து கொள்ளவும்.


புடலங்காய் துவட்டல்
#நாட்டு காய்கறி உணவுகள்1.முதலில் புடலங்காயை முழுதாக கழுவி நைசாக நறுக்கி வைத்து கொள்ளவும். நறுக்கிய பிறகு கழுவினால் பாதி சத்து தண்ணீரில் போய்விடும்.2.வெங்காயத்தை தோலுரித்து நன்கு பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வரமிளகாய் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.3.துவரம் பருப்பை ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும். தேங்காய் துருவல், கறிவேப்பிலை எடுத்து வைத்து கொள்ளவும்.4.ஒரு எண்ணெய் சட்டி அல்லது கடாயில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு நன்கு வெடிக்க விடவும். பிறகு கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு சிறிது வதக்கவும்5.நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். நன்கு சிம்மில் வைத்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய புடலங்காயை சேர்க்கவும்.6.புடலங்காயை தாளிதத்துடன் நன்கு கிளறி விடவும். பிறகு உப்பு சேர்க்கவும்7.மீண்டும் கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும். மீண்டும் கிளறிவிட்டு மூடி 5 நிமிடம் வைக்கவும்.8.ஐந்து நிமிடம் கழித்து பிறகு நன்கு கிளறி விடவும். இப்போது காய் நன்கு வெந்து இருக்கும். இதில் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்9.புளி குழம்பு, வத்த குழம்பு, மீன் குழம்பு இவைகளுக்கு ஏற்ற சைட் டிஸ்... புடலங்காய் இளம் பச்சை நிறத்திலும், கறிவேப்பிலை கரும்பச்சை நிறத்திலும், பருப்பு மஞ்சள் நிறத்திலும், தேங்காய் பூ வெள்ளை நிறத்திலும் பார்க்க கலர்புல்லா இருக்கும். சத்து மிகுந்தது.


அவரைக்காய் குழம்பு
அவரைக்காயை கொஞ்சம் பெரியதாக வெட்டிக் கொள்ளவும்.சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 3 தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்துக் கொள்ளவும், பொறிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் , பின்பு மஞ்சள் தூள், சாம்பார் தூள் 2 பூன் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அவரைக்காயை சேர்த்து வேகவிடவும் , கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும் கொஞ்சம் வெந்ததும் , அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து வேகவிடவும் , உப்பு சேர்த்து வேகவிடவும் , வெந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும் .


மண்பானை கோழி வறுவல்
நம் பாரம்பரிய உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மண்பானை சமையல்.. அதிலும் மண்பானையில் கோழி வறுவல் செய்தால் அதன் ருசிக்கு அளவே இல்லை..முதலில் ஒரு வானலில் ஏலக்காய், பட்டை, மிளகு,சீரகம்,தனியா,வர மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 முதல் 3 நிமிடம் வரை வறுக்கவும்.நன்கு ஆறவைத்து பின்னர் அரைக்கவும்.இப்போது ஒரு மண்பானையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்பின்னர் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும், மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.சிக்கன் நன்றாக வெந்ததும் சீரக தூள் சேர்க்கவும்..கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.. சுவையான மண்பானை கோழி வறுவல் தயார்..


கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம்.


கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்..


#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)
முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்..பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. கொத்தமல்லி தூவி பரிமாறவும்..


பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு
முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம்,இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும். இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.. சுவையான மண்பானை மீன் குழம்பு தயார்..


உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌
#pms family அருமையான ருசியான சுவைமிக்க உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது கடுகு,சீரகம்,பெருங்காய தூள் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் கீரின பச்சை மிளகாயும்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து அளவாக வதக்காகவும்,பின் பச்சை பட்டாணி,மஞ்சள் தூள் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்,வந்தங்கியவுடன் அதனுடன் சிறிது மல்லி தூள்,கரம் மசாலா, வர மிளகாய் பொடி,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்,பின் வேக வைத்து எடுத்து மசித்து வைத்துள்ள உருளை கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மசாலா பச்சை வாசனை போக மூடி போட்டு ஒரு கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.... சப்பாத்தி,பூரி போன்றவைகளுக்கு சுவையான உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி தயார்.


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்....


வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும்


வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍


தேவையான பொருட்கள்:
செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பை போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.பின்பு கீரையை நீரில் ஒருமுறை அலசி, குக்கரில் உள்ள பருப்புடன் சேர்த்து, அடுப்பில் வைத்து கீரையை வேக வைக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் குக்கரில் உள்ள கீரையை பருப்புடன் சேர்த்து வாணலியில் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.


ஆலு பராத்தா #GA4
வேக வைத்த உருளைக்கிழங்கு தோல் நீக்கிய பின் மசித்து வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் சீரக தூள், மிளகாய் தூள் தனியா தூள் மிளகு தூள் சேர்த்து வதக்கவும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் இந்த மசாலாவை பிசைந்து தேய்த்து வைத்துள்ள பராத்தா மாவு முழுவதும் பரவியது போல ஆலு மசாலா தடவி பராத்தா செய்வது போன்று உருட்டி தேய்த்து தவாவில் வெண்ணெய் சேர்த்து சுடவும்.... அருமையான ஆலு பராத்தா தயார் 😋


பச்சைப்பயறு கடையல் (Pachaipayaru kadaiyal recipe in tamil)
பச்சைப்பயறு கத்திரிக்காய் சேர்த்து வேக வைத்து எடுக்கவும் அதை நன்கு கடைந்து வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும் பின் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சேர்த்து வதக்கவும் பின் முந்திரி, கசகசா, உடைந்த கடலை சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதி வந்ததும் தாளித்து இறக்கவும்...... நார்ச்சத்து நிறைந்த பச்சைப்பயறு கடையல் தயார்...


மணத்தக்காளி கீரை சட்னி
கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.கடாயில் எண்ணை விட்டு , காய்ந்ததும் உழுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின்பு அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு,சிகப்பு மிளகாய்,புளி ,மணத்தக்காளி கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கிய கலவை ஆரிய பிண்பு உப்பு ,தேங்காய் சேர்த்து அரைக்கவும்.அரைத்த பிண்பு கடுகு, கரிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்,சட்னி ரெடி.


மிளகு புளிக்குழம்பு (Milagu pulikulambu recipe in tamil)
#arusuvai4


பத்து நிமிடத்தில் சுவையான சேமியா
1.வானெலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு, கடலை பருப்பு, உளுந்து, வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.2.ஒரு பாக்கெட் சேமியாவிற்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்3.பிறகு சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும் பின்னர் ஒரு தட்டை கொண்டு மூடவும்.4. ஐந்து நிமிடம் கழித்து கிளறி விடவும்... இதோ சுவையான சேமியா தயார் !!!!!!!r


கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepotகீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள்.


Mango rice (மாங்காய் சாதம்)
முதலில் மாங்கையை தோல் நீக்கி பொடியாக சீவி கொல்லவும்.கடாய் வைத்து என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், போடவும், பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும் சிறிது நேரம் கழித்து சீவி வைத்த மாங்காயயை போட்டு வதக்கவும் , நன்றாக வதங்கியதும் சாதத்தை போட்டு மிக்ஸ் செய்யவும் சுவையான மாங்காய் சாதம் தயார்.


வாழைத்தண்டு சூப்
வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி மோரை தண்ணீர் உடன்கலந்த கரைசலில் போடவும் குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு 2 விசில் சத்தம் வரும் வரை வேக விடவும் வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும் வேக வைத்த வாழைத்தண்டில் முக்கால் பாகத்தை வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி வாழைதண்டு சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும் குக்கரில் வெண்ணெய் சேர்த்து சூடாணதும் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் மீதமுள்ள வேக வைத்த வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும் பிறகு மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும் பின் வடித்து எடுத்த வாழைத்தண்டு சாற்றை ஊற்றிஉப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்பிறகு சோளமாவில் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து அந்த கரைசலை வாழைத்தண்டு சூப் உடன் கலந்து கெட்டியாக (சூப் பதம்) வரும் வரை கொதிக்க விடவும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.. சத்தான வாழைத்தண்டு சூப் தயார்


காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)
#Arusuvai2 பூண்டு தக்காளி சேர்த்து அரைப்பதால் இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும்.


கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு மசைக்கையின் போது பருப்பு பிடிக்காது.ஆனால் பருப்பு புரோட்டீன் கொண்டிருப்பதால் பருப்பு உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கிலாக் காய் புளிப்பு சுவை மிகுந்தது.மேலும் மசைக்கை காரணமாக ஏற்படும் வாந்தியை கட்டு படுத்த கூடிய சுவை உடையது.பருப்பில் இந்த காயை இரண்டாக அரிந்து விதை எடுத்து சேர்த்து உப்பு காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் வைத்து குடுத்தால் கர்ப்பிணி பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.


#Streetfood. கடலை மசாலா
பட்டாணி கடலையை ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காயெண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இஞ்சி +பச்சைமிளகாய் விழுது, கருவேப்பிலை, உப்பு, வேக வைத்த பட்டாணி கடலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சாட் மசாலா, எலுமிச்சம்பழம் ஜூஸ் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.


பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது.


தேங்காய் பொறியல் (Thenkaai poriyal recipe in tamil)
#coconut சுவையான ஆரோக்கியமான துணை உணவு


முட்டை மிளகு மசாலா (Muttai milagu masala recipe in tamil)
#அறுசுவை 5


குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்...

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9783656
கமெண்ட்