கேரள கதம்பக் கறி

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#nutrient1 #book
கேரள மாநிலத்தில் எல்லா காய்கறிகளையும் வைத்து கதம்பக் கறி போல செய்வார்கள். இதில் முருங்கைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், கொத்தவரங்காய், பூசணிக்காய், வெண் பூசணிக்காய், பீன்ஸ், அவரைகாய் போன்ற காய்களை சேர்த்து செய்யலாம். இன்று என்னிடமிருந்த முருங்கைக்காய், மஞ்சள் பூசணிக்காய், கொத்தவரங்காய், மற்றும் கேரட் கொண்டு இந்த கதம்ப கறியை செய்துள்ளேன். இதில் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் மூன்றையும் சேர்த்து அரைத்து சேர்க்க வேண்டும். இதனுடன் தயிர் சேர்த்து செய்தால் அவியல் ஆகும். இந்த காய்கறிகளில் புரத சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. கொத்தவரங்காய் இதயத்திற்கு நல்லது. பூசணிக்காய் ,கேரட் கண்பார்வைக்கு நல்லது. முருங்கைக்காய் இரும்புசத்து அதிகம் உள்ளது. எல்லா காய்கறிகளும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகவும் பலன் தரும். பொதுவாக கேரளா மக்கள் இயற்கைச் சத்துக்களை தான் சமைக்கும் காய்கறிகளில் இருந்து அதிகம் பெறுவார்கள். அதிக காய்கறிகளை கலந்து கலவையாக சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  1. முருங்கை காய் 1
  2. கேரட் 1
  3. 1/2 கப் பூசணிக்காய்
  4. கொத்தவரங்காய் 20
  5. கால் கப் தேங்காய்
  6. 3 பச்சை மிளகாய்
  7. உப்பு தேவையான அளவு
  8. தாளிக்க
  9. ஒரு ஸ்பூன் சீரகம்
  10. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணை
  11. அரை ஸ்பூன் கடுகு
  12. அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  13. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் காய்கறிகளை படத்தில் காட்டியவாறு நீளவாக்கில்அரிந்து கொள்ளவும். ஒரு வாணலியில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். முதலில் அரிந்த கேரட், கொத்தவரங்காய், முருங்கைக்காயை, வேறு நாட்டு காய்கறிகள் இருந்தால் அவைகளையும் போட்டு ஒரு ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.

  2. 2

    காய்கள் பாதி வெந்தவுடன் அரிந்து வைத்த பூசணிக்காயை சேர்த்து மூடி வைத்து வேக விடவும். ஏனென்றால் எல்லா காய்களுடன் பூசணிக்காயை சேர்த்து வேக விட்டால் பூசணிக்காய் குழைந்து விடும். காய்களை குழைய வேக விட வேண்டாம். கடைசியாக காயில் தேவையான உப்பு சேர்க்கவும். முதலில் உப்பு சேர்த்தால் காய் கலர் மாற வாய்ப்புண்டு. பிறகு தேங்காய்,சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் பச்சையாக கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வேகவைத்த காய்கறிகளில் தண்ணீர் சுண்டியவுடன் தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விடவும். மிதமான தீயில் கொஞ்சம் சூடுபடுத்தவும். தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானவுடன் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து காய்கறி களில் சேர்க்கவும். காய்களை மிதமான தீயில் சூடபடுத்தி விடவும். கடைசியாக கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

  4. 4

    இப்போது கதம்ப கறி தயார். இந்த வகை கறி கேரளாவில் மிகவும் பிரசித்தம். மோர் குழம்பு மற்றும் நம் தமிழ்நாட்டு சாம்பார், ரசம் இவற்றுடன் சாதத்தில் சேர்த்து சாப்பிடவும் இந்த காய் கறி சுவையாக இருக்கும். மற்ற நாட்டுக் காய்கறிகள் வீட்டில் இருந்தால் சேர்த்து செய்யலாம். வாழைக்காய், அவரைக்காய் போன்ற காய்கள் சேர்த்து செய்தால் மிகவும் சுவை கூடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes