தக்காளி புலவு

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு நபர்
  1. ஒரு கப்பாசுமதி அரிசி
  2. 4தக்காளி
  3. முந்திரிபருப்பு 4,பட்டை ஒரு துண்டு, இரண்டு கிராம்பு,ஏலக்காய்,1,பிரிஞ்சி இலை ஒன்று
  4. 1பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
  5. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு நறுக்கியது
  6. 2 ஸ்பூன்நெய் 2 ஸ்பூன் ஆயில்
  7. காரத்திற்குதேவையான சிவப்பு மிளகாய் தூள் உப்பு
  8. சிறிதளவுமல்லித்தழை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    பாசுமதி அரிசி 2 முறை கழுவி தேவையான நீர் விட்டு அரை மணி நேரம் ஊற விடவும். தக்காளியை கழுவி மிக்ஸியில் மைய அரைத்து எடுத்து வைக்கவும். இஞ்சி பூண்டு பட்டை கிராம்பு ஏலக்காய் முந்திரி எடுத்து வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

  2. 2

    குக்கரில் நெய், ஆயில் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் முந்திரி பிரிஞ்சி இலை தாளிக்கவும். வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான சிவப்பு மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.ஊற வைத்த பாசுமதி அரிசி இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும்.

  3. 3

    5 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும். மெதுவாக கிளறி விடவும் சுவையான தக்காளி புலவு சாதம் தயார். மல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes