அரிசி கூழ் வடகம்(vadagam recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

கடினமானதாகத் தோன்றும்,ஆனால் எளிமையான செய்முறை தான். சும்மாவே சாப்பிடலாம்.பல மாதங்களுக்கு சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.ஆனால்,சில நாட்களில் நாம் சாப்பிட்டு காலி பண்ணிவிடுவோம்.

அரிசி கூழ் வடகம்(vadagam recipe in tamil)

கடினமானதாகத் தோன்றும்,ஆனால் எளிமையான செய்முறை தான். சும்மாவே சாப்பிடலாம்.பல மாதங்களுக்கு சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.ஆனால்,சில நாட்களில் நாம் சாப்பிட்டு காலி பண்ணிவிடுவோம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3நாட்கள்
10பேர்
  1. 1கப் பச்சரிசி
  2. 1கப் 1கப் ஜவ்வரிசி
  3. 2ஸ்பூன் சீரகம்
  4. தேவையானஅளவு கல் உப்பு

சமையல் குறிப்புகள்

3நாட்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

    பச்சரிசியை நன்றாகக் கழுவி குறைந்தது 4 மணி நேரம் ஊறவிடவும்.

    ஜவ்வரிசியைக் கழுவி குறைந்து 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் அரிசி மற்றும் ஜவ்வரிசியை மிக்ஸி ஜாரில்,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

  3. 3

    ஆப்ப மாவு பதத்திற்கு தண்ணியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    அடுப்பில்,அடி கனமான பாத்திரம் வைத்து 1கப்அரிசிக்கு,8கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து அதிக தீயில் வைத்து கொதிக்க விடவும்.உப்பு கரைந்ததும்,1சொட்டு தண்ணீரை சுவைத்து உப்பை சரி பார்க்கவும்.

  5. 5

    நன்றாக கொதித்ததும், தீயை சிம்மில் வைத்து அரைத்து வைத்த கலவையை மெதுவாக சேர்த்து கிளறவும்.

    அடிப்பிடிக்காமல்,கலந்து கொண்டே இருக்க வேண்டும்

  6. 6

    10நிமிடங்கள் ஆகியும் மாவு பதம் தண்ணீராக உள்ளது. இன்னும் மாவு வேகவில்லை.

  7. 7

    மேலும் 10 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கும் பொழுது மாவு கெட்டியாகி அங்கங்கு வெந்ததற்குக்கு அறிகுறியாக bubbles மேலே வந்து விடும்.மாவும் 'திக்' காக மாறி விட்டது.

  8. 8

    அடுப்பை அணைத்து,மாவை வேறு பாத்திரத்திற்கு மாற்றி சீரகம் சேர்த்து கிளற வேண்டும். முதலிலேயே சீரகம் சேர்த்து விட்டால் கலர் மாறிவிடும்.

  9. 9

    சூடு இருக்கும்பொழுதே, பாயின் மேல் காட்டன் துணியை விரித்து அதில் சிறிய கரண்டி அளவு மாவை ஊற்றி விரித்து விட வேண்டும்.

  10. 10

    இதை மாடியில் நல்ல வெயிலில்,முழு நாள் காய விட வேண்டும்.எறும்பு,காக்கா சீண்டாமல் இருக்க வத்தல் அங்கங்கு போட்டு விடவும்.

  11. 11

    முதல் நாள் நன்கு காய்ந்துவிடும்.மேலும் ஒரு நாள் காய விட்டால்,சுருங்காமல் அந்த வட்டங்கள் அப்படியே கிடைக்கும்.அதனால் இன்னும் ஒரு நாள் காய விடலாம்.

  12. 12

    பின் காய்ந்ததும், துணியை திருப்பி போட்டு தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் விட்டு(ஈரத்தில் ஊறினால் மட்டுமே எடுக்க முடியும்) எடுத்தால்,எடுக்க வரும்.

  13. 13

    எடுத்தவை கொஞ்சம் ஈரப்பதமாக இருப்பதால் தட்டில் போட்டு இரவு காற்றோட்டத்தில் வைத்து விட்டு மறுநாள் காலை நல்ல வெயிலில் மீண்டும் காயவிட வேண்டும்.

  14. 14

    இரண்டாம் நாள் வெயிலில் காய்ந்ததும், 'சலசல'வென சத்தம் வரும். உடைத்தால் உடையும். இப்பொழுது நம் வடகம் தயாராகிவிட்டது.

  15. 15

    இதை காற்று புகாத டப்பாவில் அடைத்து,பல மாதங்களுக்கு வைத்து,தேவைப்படும்போது, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம்.

    சும்மாவே சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

  16. 16

    அவ்வளவுதான்.அரிசி கூழ் வடகம் ரெடி.இது எல்லாவிதமான சாப்பாட்டிற்கும் பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes