முருங்கைக்கீரை எள்ளு சாதம்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

Nutrient2 # book
முருங்கைக்கீரை எள்ளு சாதம் என் அம்மா செய்யும் உணவுகளில் மிகவும் சுவையானது. இந்த சாதத்தை சுவைத்தவர்கள் மீண்டும் செய்து கொடுக்கச் சொல்லி கேட்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். மாரியம்மன் பண்டிகை போது மாரியம்மனுக்கு படைக்க செய்வோம். எள்ளில் புரத சத்தும், இரும்புச் சத்தும், விட்டமின் சத்துக்களும், தாதுக்களும் செறிந்துள்ளது. கால்சியம் சத்து 97% உள்ளது. புரத சத்து இதில் 36% உள்ளது.இரும்புசத்து 81% உள்ளது மெக்னீசியம் 87% உள்ளது.விட்டமின் பி 40% உள்ளது. மேலும் முருங்கைக் கீரையில் விட்டமின் சி, விட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிரம்பியுள்ளது. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது, கண் பார்வைக்கு நல்லது. சருமப் பாதுகாப்பிற்கு முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. குடல்களை பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது, எலும்பு உறுதிக்கும் உதவுகிறது. நல்ல மனநிலையை தருகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  1. 4கைப்பிடி முருங்கை இலை
  2. 9வர மிளகாய்
  3. 1கப் வெள்ளை எள்ளு
  4. தாளிக்க
  5. 2ஸ்பூன் எண்ணெய்
  6. 1ஸ்பூன் கடுகு
  7. 1ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  8. ஒரு தம்ளர் அரிசியில் வடித்த சாதம்
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி ஒரு டம்ளர் ஊறவைத்து கொள்ளவும்.அரை மணி நேரம் ஊறிய பின் சாதமாக வடித்துக் கொள்ளவும். ஒரு கப் எள்ளை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும். பிறகு எள்ளை வேறு பாத்திரத்தில் மாற்றிவிட்டு 5 வர மிளகாயை வெறும் வறுப்பாக சிவக்கவறுத்து கொள்ளவும். இரண்டையும் ஆற விடவும். முதலில் மிக்ஸியில் மிளகாயை அரைத்துக் கொண்டு பிறகு அதனுடன் எள்ளை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

  2. 2

    அரிசி ஊறிய பின் சாதமாக வடித்துக்கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கிள்ளிய வரமிளகாய் 4 சேர்த்து கருகாமல் வறுத்து கொள்ளவும்.

  3. 3

    முருங்கைக் கீரையை ஆய்ந்து நன்கு தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். நீரை வடித்துக் கொள்ளவும். இந்த நீரை வீணாக்காமல் சூப் போட்டு குடித்துக் கொள்ளலாம். வெந்த கீரை ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும். கைகளால் இலைகளை முடிந்தவரை தனித்தனியாக பிரித்துகொள்ளவும்

  4. 4

    வடித்த சாதத்தை ஆற விட்டு அதில் தாளித்தவற்றை சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அரைத்த எள்ளு மிளகாய் பொடியை சேர்த்து கிளறவும். கடைசியாக வேகவைத்த முருங்கைக்கீரையை சாதத்துடன்சேர்த்து நன்கு கலந்து விடவும். சுவையான முருங்கை கீரை எள்ளு சாதம் ரெடி. தொட்டு கொள்ள அப்பளம், வடகம் நன்றாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes