தேவையான பொருட்கள்

  1. 2கரிமீன் -
  2. வெங்காயம் - ஒன்று
  3. தக்காளி - ஒன்று
  4. இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  5. மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
  7. தேங்காய் பால் - 1/4 கப்
  8. தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
  9. வாழை இலை - 2 துண்டுகள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீனை சுத்தம் செய்து மிளகாய்தூள், உப்பு, தடவி வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    .வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

  4. 4

    அதில் வற்றல்தூள் சேர்த்துபிரட்டி விட்டு தேங்காய் பால் ஊற்றி கெட்டியானதும் இறக்கவும்.

  5. 5

    வாழையிலையின் அடிப்பாகத்தை அனலில் காண்பித்து எடுத்து உள்பக்கமாக எண்ணெய் தடவி மசாலாவை அதில் மேல் பரவலாக வைக்கவும்

  6. 6

    அதன் மேல் வறுத்த மீனை வைக்கவும். மீண்டும் மசாலாவை மேலே வைத்து இலையை மூடி கட்டவும்.

  7. 7

    தவாவில் மீனுடன் வைத்து கட்டிய வாழையிலையை வைத்து மிதமான சூட்டில் நன்கு வேக வைத்து எடுக்கவும்.

  8. 8

    கரிமீன் கேரளாவில் கிடைக்கும் நன்னீரில் வளரும் ஒருவகை மீனாகும்.அதற்கு மாற்றாக நெய்,வாவல்,ஊளா போன்ற மீன்களை இதே முறையில் சமைக்கலாம்.)

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes