தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 4 பாவக்காய்
  2. 1 கப் கடலை மாவு
  3. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  5. 1/2 கப் தண்ணீர்
  6. 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  7. 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. எண்ணெய் வறுத்து எடுக்க

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாவக்காய் பாதியாக நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளை அகற்றவும். பின்னர் சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதில் பாவக்காய் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி ஆற விடவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், தனியா தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி பிசைந்து அதில் ஆற வைத்த பாவக்காய் துண்டுகள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பாவக்காய் கலவையை சிறிது பக்கோடா ஆக இட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.

  5. 5

    இதனை நாம் இரு முறை வறுத்து எடுக்க வேண்டும். இரண்டாம் முறை வறுக்க, தீயை அதிகமாகக்கி எண்ணெய் மிகவும் சூடான பின்னர் வறுத்து எடுத்த பக்கோடா வை அதில் 10 விநாடிகள் போட்டு எடுக்கவும். இதை செய்வதால் பக்கோடா அதிகம் முரமுரப்பாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharadha (@my_petite_appetite)
அன்று

Similar Recipes