சாமை அரிசி பொங்கல்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#Millet
சாமை சிறு தானியங்களில் ஒரு வகை.இதை சாதமாக ,உப்புமாவாக அல்லது பொங்கலாக செய்து சாப்பிடலாம்.எல்லா ஆரோக்ய சத்துகளும் நிறைந்த சிறு தானியமாகும்.எளிதில் ஜீரண ஆகக்கூடிய உணவு.மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அரிசி உணவை தவிர்க்க இதை போன்ற சில தானியங்களை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. நலத்திற்கு மட்டும் அல்ல உடல் பருமனையும் குறைக்கும்.அன்றாட வேலைகளை நாம் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செய்ய முடியும்.

சாமை அரிசி பொங்கல்

#Millet
சாமை சிறு தானியங்களில் ஒரு வகை.இதை சாதமாக ,உப்புமாவாக அல்லது பொங்கலாக செய்து சாப்பிடலாம்.எல்லா ஆரோக்ய சத்துகளும் நிறைந்த சிறு தானியமாகும்.எளிதில் ஜீரண ஆகக்கூடிய உணவு.மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அரிசி உணவை தவிர்க்க இதை போன்ற சில தானியங்களை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. நலத்திற்கு மட்டும் அல்ல உடல் பருமனையும் குறைக்கும்.அன்றாட வேலைகளை நாம் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செய்ய முடியும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 + 20 நிமிடம்
2 பேர்
  1. 1கப் சாமை
  2. 1/2 கப் அல்லதுஅதற்கு கொஞ்சம் குறைவாக பாசிப்பருப்பு
  3. 4 ஸ்பூன் நெய்
  4. 1ஸ்பூன் மிளகு
  5. 1ஸ்பூன் சீரகம்
  6. 1ஸ்பூன் துருவிய இஞ்சி
  7. 1 பச்சை மிளகாயை இரண்டாக கீறி யது
  8. 10 முந்திரி பருப்பு
  9. 1இணுக்கு கறிவேப்பிலை
  10. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 + 20 நிமிடம்
  1. 1

    மேற்கூறிய அனைத்து தேவையான பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். ஒரு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் இஞ்சியை தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும்.சாமை அரிசியை மூன்று நான்கு முறை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பாசிப் பருப்பையும் கழுவி வைத்துக் கொள்ளவும். அரை மணி நேரம் இரண்டையும் தனித் தனியாக ஊற வைத்துக் கொள்ளவும் நெய் 4 ஸ்பூன் வரை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    சாமை மற்றும் பாசிப்பருப்பு அரை மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீர் வடித்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து அதில் 5 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். சாமை அரிசி ஒரு கப் பாசிப்பருப்பு அரை கப் ஆக மொத்தம் ஒன்றரை கப் அளவிற்கு 5 கப் தண்ணீர் மிகவும் சரியாக இருக்கும். இதை பிரஷர் பேனில் நேரடியாக சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும். குக்கரை மூடி ஆவி வந்தபிறகு வெயிட் போடவும். நான்கு அல்லது ஐந்து சதம் வரை விடவும்.

  3. 3

    குக்கரில் சாமை அரிசி வெந்து தயார் ஆவதற்குள், தாளிக்கும் கரண்டியில் 3 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் சீரகம் நுணுக்கிய மிளகு, இஞ்சி துருவல், கீறிய மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயத்தூள் தாளித்துக் கொள்ளவும். முந்திரியை தனியாக நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் ஆவி அடங்கிய பின் குக்கர் மூடியைத் திறந்து ஒரு கரண்டி கொண்டு பொங்கலை நன்கு கலந்து விடவும். உப்பு சரி பார்த்து கொள்ளவும். இப்போது முந்திரிப்பருப்பு மற்ற தாளித்த பொருட்களை, பொங்கலில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    மீதியுள்ள நெய்யை கடைசியாக பொங்கலில் சேர்த்துக் கொள்ளவும்.சுவையான சாமை அரிசி பொங்கல் தயார். தேங்காய் பொட்டுக்கடலை சட்னி மற்றும் சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும். இந்தப் பொங்கல் சுட சுட சாப்பிட்டால்தான் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes