தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 6- தக்காளி
  2. 2- பெரிய வெங்காயம்
  3. 3 டீஸ்பூன் -எண்ணெய்
  4. 1 டீஸ்பூன்- கடுகு உளுத்தம்பருப்பு
  5. 1 டீஸ்பூன்- கடலைப்பருப்பு
  6. 1 டீஸ்பூன்- சோம்பு
  7. 1/2 டீஸ்பூன்- சீரகம்
  8. 1பிரியாணி இலை,2- கிராம்பு,1- பட்டை 1- அன்னாசி மொக்கு
  9. 2 - பச்சை மிளகாய்
  10. 2- வரமிளகாய்
  11. சிறிதுகொத்தமல்லி இலை கறிவேப்பிலை
  12. தேவையானஅளவு உப்பு
  13. 1/4 டீஸ்பூன்- மஞ்சள்தூள்
  14. 1 டீஸ்பூன்- சாம்பார் தூள்
  15. 1 டீஸ்பூன்- இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை வகைகள் சேர்த்து பொரியவிடவும் பின்னர் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சீரகம் சோம்பு சேர்த்து பொரியவிடவும்.பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.. பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கி தேவையான அளவு உப்பு மஞ்சள்தூள் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக தொக்கு வரும் வரை வதக்கவும்.. இறுதியில் சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்..

  3. 3

    பின்னர் வேகவைத்த சாதம் சேர்த்து நன்றாக கலந்து உப்பு சரிபார்த்து தேவை எனில் மட்டும் சேர்த்துக் கொள்ளவும். சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.இப்போது சுவையான தக்காளி சாதம் தயார்.நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes