தேவையான பொருட்கள்

  1. துவரம்பருப்பு ஒரு கப்
  2. சின்ன வெங்காயம் 10
  3. பழுத்த தக்காளி 5
  4. பூண்டு 4 பல் மஞ்சள் தூள் ஒரு சிறிய ஸபூன்
  5. புளி ஒரு சிறு நெல்லிக்காய் அளவு
  6. சாம்பார் பொடி ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. தாளிப்பதற்கு இரண்டு கரண்டி ஆயில் கடுகு பெருங்காயம் ஒரு வரமிளகாய் கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் பருப்பு வேக வைக்கவும். வெங்காயம் பூண்டு,தக்காளி,நறுக்கி வைக்கவும். புளியை ஊற வைக்கவும்.ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் ஆயில் விட்டு கடுகு, ஒரு வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பூண்டு சேர்த்து வதக்கவும்.தக்காளி தேவையான சாம்பார் பொடி, உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    வேக வைத்த பருப்பை நன்கு மசித்து வதக்கிய வெங்காயம் தக்காளியுடன் கலந்து ஒரு டம்ளர் நீர் விட்டு சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

  3. 3

    தக்காளி நன்கு வெந்ததும் புளியை கரைத்து வடிகட்டி ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்து நுரை பொங்க கொதி வந்ததும் இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இழை தூவி மூடி வைக்கவும்.

  4. 4

    மிகவும் சுவையான தக்காளி சாம்பார் தயார்.இட்லி, தோசை, சப்பாத்தி சாதம், அனைத்திற்கும் ஏற்றது. நீங்களும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes