தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#ed1 இந்த முறை தக்காளி சாதத்தில் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் நான் செய்தேன்.குக்கரில் தண்ணீர் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் போலவே சுவை இருந்தது. தேவை என்றால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது.

தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)

#ed1 இந்த முறை தக்காளி சாதத்தில் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் நான் செய்தேன்.குக்கரில் தண்ணீர் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் போலவே சுவை இருந்தது. தேவை என்றால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 4பெரிய சைஸ் தக்காளி
  2. 1பெரிய சைஸ் பெரிய வெங்காயம்
  3. 20 பூண்டு பற்கள்
  4. 5 to 6 பச்சை மிளகாய்
  5. 1 ஸ்டார்
  6. 1அன்னாசி மொக்கு
  7. 1மல்லி மொக்கு
  8. 1இன்ச் பட்டை
  9. 4கிராம்பு
  10. 1ஏலக்காய்
  11. 1ஸ்பூன் சோம்பு
  12. 1/4 கப் எண்ணெய்
  13. 1ஸ்பூன் கடுகு
  14. கொஞ்சம்கருவேப்பிலை
  15. கொஞ்சம்பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை
  16. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  17. 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  18. 1/2 ஸ்பூன் பிரியாணி மசாலா தூள்
  19. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  20. தேவையானஅளவு தூள் உப்பு
  21. 1 தம்ளர் ஏதாவது ஒரு சாப்பாட்டு அரிசி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு டம்ளர் சாப்பாட்டு அரிசி கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். நான் இன்று புழுங்கலரிசி எடுத்துக் கொண்டேன். நீங்கள் பாஸ்மதி ரைஸ்,அல்லது சீரகசம்பா அல்லது பச்சை அரிசி எது வேண்டுமென்றாலும் ஊற வைத்துக் கொள்ளலாம். அரிசி நன்கு ஊறியவுடன் சாதம் உதிரியாக இருக்குமாறு வடித்துக் கொள்ளவும்.

  2. 2

    முதலில் வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். அதேபோல் எல்லா தக்காளியையும் பொடியாக அரிந்து கொள்ளவும். பூண்டு பற்களை உரித்து வைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயை இரண்டிரண்டாக அறிந்து கொள்ளவும். கரு வேப்பிலை, கொத்து மல்லி தழை சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துக் கடுகு சேர்த்து பொரியவிடவும். பிறகு அதில் ஸ்டார் அன்னாசி மொக்கு மல்லி மொட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்து வாசம் வர சூடுபடுத்திக் கொள்ளவும். பிறகு முதலில் வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு பூண்டு வாசம் வர வதக்கி கொண்டு அதன் பிறகு பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து வதக்கவும். எண்ணெய் தாராளமாக சேர்த்து இருப்பதால் இவை அந்த எண்ணெயிலேயே நன்கு சுருங்கி வதங்கி வரும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். மூடிவிட்டு அவ்வப்போது அடிப்பிடிக்காமல் இருக்க இரண்டு மூன்று முறை கிளறி விடவும். பிறகு இதில் பிரியாணி தூள் கொத்தமல்லித் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு மசாலா வாசம் வந்து கலவையுடன் மசாலா சேர்ந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.

  4. 4

    வடித்த சாதத்தை இந்த தக்காளி மசாலா கலவையில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.மிதமான தீயில் அடுப்பில் வைத்து கிளறவும். சாதம் சூடாக இருக்கும். உப்பு தேவைக்கேற்ப பார்த்து மீண்டும் சேர்த்து கிளறிக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் சுவையான தக்காளி சாதம் தயிர் பச்சடியுடன் தயார். சாதம் வடித்த தில் தனியாகக் கொஞ்சம் நான் எடுத்து வைத்து தயிர் சாதம் கலந்து கொண்டேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes