தேவையான பொருட்கள்

  1. 2 கப்பச்சரிசி
  2. 1 கப்துருவிய தேங்காய்
  3. 1 கப்நாட்டு சர்க்கரை
  4. 1 ஸ்பூன்ஏலக்காய் பொடி
  5. 4 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பச்சரிசி 2 கப் எடுத்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    பின்பு நீரை வடித்து மிக்ஸியில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.

  3. 3

    அரைத்த மாவினை ஒரு வாணலியில் ஊற்றி மிதமான சூட்டில் நெய் 2 ஸ்பூன் ஊற்றி கிளறி கொன்டே இருக்கவும். நமது கையில் மாவு ஒட்டாத வரை கிளறிக்கொன்டே இருக்க வேண்டும். பின்பு அடுப்பை அணைத்து சிறிது ஆற விடவும்.

  4. 4

    வாணலியில் நெய் 2 ஸ்பூன் ஊற்றி துருவிய தேங்காய் போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கி பின்பு நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நாட்டு சர்க்கரை சிறிது இளகும் வரை வதக்கி இறக்கவும்.

  5. 5

    வணக்கிய மாவில் சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி அதில் நடுவில் சிறிது தேங்காய் பூரணத்தை வைத்து மடித்து கொழுக்கட்டை போல் பிடிக்கவும்.

  6. 6

    இட்லி பாத்திரத்தில் பிடித்த பூரணத்தை வைத்து பத்து நிமிடம் வேக விடவும்.

  7. 7

    மிகவும் மிருதுவான பூரணத்தை விநாயக கடவுளுக்கு படைத்து பின்பு சூடாக சாப்பிடலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rathipriya
Rathipriya @cook_18123696
அன்று

Similar Recipes