சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் ஆயில் விட்டு முக்கால் ஸ்பூன் சோம்பு, 1 கிராம்பு, 1 அன்னாசிபூ, 1ஏலக்காய், 1கிராம்பு போட்டு வருத்து, அதில் 10 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு துருவிய தேங்காய் அரை மூடி போட்டு வதக்கவும். அதனுடன் பூண்டு 6 பல், ஒரு துண்டு இஞ்சி, 1 பச்சை மிளகாய், பொட்டுகடலை 1 டீஸ்பூன் சேர்த்து அரைக்கவும்.
- 2
ஒரு வாணயில் ஆயில் விட்டு பட்டை, சோம்பு தாளித்து, ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு கோல்டன் பிரவுன் வரும் வரை வதக்கவும். அடுத்து புதினா, கொத்தமல்லி போட்டு வதக்கவும். அடுத்து 2 தக்காளி போட்டு நல்ல மைய வதக்கவும். பிறகு அரைத்த தேங்காய் விழுது போட்டு வதக்கவும்.
- 3
பிறகு மஞ்சள் தூள் சிறிது, மிளகாய் தூள் 1 டீஸ்பூன், மல்லி தூள் 1 டீஸ்பூன், சீரக தூள் கால் டீஸ்பூன், செட்டிநாடு சிக்கன் மசாலா 1 டீஸ்பூன் போட்டு வதக்கவும். பிறகு தேவையான உப்பு, சிறிது ஜீனி போட்டு தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்கவிடவும். ஆயில் பிரிந்து வரும் வரை கொதித்ததும் மல்லி தழை தூவி பரிமாறவும். நன்றி. (தேவையான பொருட்கள் பகுதியில் இடம் போதவில்லை. அதனால் செய்முறையில் குறிப்பிட்டு உள்ளேன்.)
Similar Recipes
More Recipes







கமெண்ட்