காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 minutes
2 பரிமாறுவது
  1. பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
  2. 1 டம்ளர்அரிசி
  3. 1/4 டம்ளர்பாசிப்பருப்பு
  4. 1கேரட்
  5. 6பீன்ஸ்
  6. 1/4 கப்பச்சை பட்டாணி
  7. 1வெங்காயம்
  8. 1 ஸ்பூன்சீரகம்
  9. 1/2 ஸ்பூன்மிளகு
  10. 1பச்சை மிளகாய்
  11. சிறிதளவுகறிவேப்பிலை
  12. தேவையான அளவுநெய்
  13. தேவையான அளவுமுந்திரி பருப்பு
  14. சிறு துண்டுஇஞ்சி
  15. சிறிதளவுபெருங்காயத்தூள்
  16. தேவையான அளவுஉப்பு
  17. 5 டம்ளர்தண்ணீர்
  18. சாம்பார் செய்ய தேவையானவை:
  19. 2கேரட்
  20. 7பீன்ஸ்
  21. 2உருளைக்கிழங்கு
  22. 100 கிராம்துவரம் பருப்பு
  23. 4 பல்பூண்டு
  24. 7சின்ன வெங்காயம்
  25. 1தக்காளி
  26. 1 ஸ்பூன்கடுகு
  27. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  28. 2 ஸ்பூன்சாம்பார் பொடி
  29. தேவையான அளவுஉப்பு
  30. சிறிதளவுபெருங்காயத்தூள்
  31. எலுமிச்சை பழ அளவுபுளி சிறிய
  32. 2 மேசைக்கரண்டிஎண்ணெய்
  33. சிறிதளவுகொத்தமல்லி
  34. சிறிதளவுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

50 minutes
  1. 1

    பொங்கல் செய்முறை : குக்கரில் அரிசி, பருப்பு சேர்த்து சிறிது நேரம் வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

  2. 2

    குக்கரில் நெய் சேர்த்து இஞ்சி சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    காய் ஓரளவு வதங்கியதும் கழுவி சுத்தம் செய்து வைத்த அரிசி, பருப்பு, உப்பு சேர்த்து 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி கிளறி 5 விசில் விட்டு இறக்கவும்.விசில் போனதும் மூடியை திறந்து ஒன்று சேர கிளறி சிறிதளவு மசித்து விடவும்.

  4. 4

    பின்னர் தாளிப்பு கரண்டியில் தேவையான அளவு நெய் விட்டு சீரகம்,மிளகு,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, முந்திரி பருப்பு சேர்த்து வதக்கி வேக வைத்து எடுத்த பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி விடவும். தேவைப்பட்டால் நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான கம கம காய்கறி பொங்கல் தயார்.

  5. 5

    சாம்பார் செய்முறை : முதலில் புளியை தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் பருப்பு, பூண்டு பல், பெருங்காயத்தூள் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.

  6. 6

    பின்னர் வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை சிறிதாக கட் செய்து சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். வாசனை போனதும் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.

  7. 7

    பிறகு வேக வைத்த பருப்பை சிறிது மசித்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதில் சேர்த்து கிளறி விடவும். காய் வேகும் வரை ஒரு மூடி போட்டு வேக வைக்கவும். பிறகு புளி கரைத்து வடிகட்டி கரைசலை எடுத்து கொள்ளவும்.

  8. 8

    காய்கறிகள் வெந்ததும் புளி கரைசலை ஊற்றவும்.சிறிது நேரம் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான காய்கறி சாம்பார் தயார். கம கம காய்கறி பொங்கலுடன் சாம்பார் சேர்த்து சூடாக பரிமாறவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes