ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி

Sowmya
Sowmya @vishalakshi

#combo3
சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
இரண்டு பேர்
  1. 200 கிராம் பன்னீர்
  2. 4வரமிளகாய்
  3. 2பெரிய வெங்காயம்
  4. 3 பெரிய தக்காளி
  5. 8 முந்திரிப்பருப்பு
  6. 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  7. 5 டேபிள்ஸ்பூன் நெய்
  8. 2 டேபிள்ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  9. 20 கிராம் பட்டர்
  10. 3 டேபிள்ஸ்பூன் பால்
  11. ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  12. ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  13. கையளவு கொத்தமல்லி
  14. ஒரு டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  15. அரை டம்ளர் சுடு தண்ணீர்
  16. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்

  2. 2

    வெங்காயம் வதங்கியவுடன் அதில் 4 வரமிளகாய் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய மூன்று பெரிய அளவு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

  3. 3

    தக்காளி லேசாக வதங்கிய பின் அதில் எட்டு முந்திரிப் பருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும் தக்காளி நன்றாக மசியும் வரை வதக்க வேண்டும்

  4. 4

    பிறகு அதை எடுத்து 10 நிமிடம் ஆற வைக்க வேண்டும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனை நைசான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    ஒரு கடாயில் 5 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நெய் சூடானவுடன் அதில் 2 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்க்க வேண்டும் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும் மிளகாய்த்தூள் கருக விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

  6. 6

    ஒரு நிமிடம் கழித்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்

  7. 7

    அதில் ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மேத்தி இலைகள் ஒரு கை அளவு கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி போட்டு ஒரு பத்து நிமிடம் அப்படியே வேக வைக்க வேண்டும்

  8. 8

    10 நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்த்தால் மசாலா நன்றாக வெந்திருக்கும் இதில் நாம் இப்போது கிரீம் சேர்க்க வேண்டும் அதற்கு க்ரீமை நாமே தயாரிக்கலாம் க்ரீம் தயாரிப்பதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் 20 கிராம் பட்டர் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை 3 டேபிள்ஸ்பூன் பால் சேர்க்க வேண்டும் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது சுவையான க்ரீன் நமக்கு தயார்

  9. 9

    நாம் அரைத்து எடுத்துள்ள பிரஸ் கிரீமை மசாலாவுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும் பிறகு அதில் அரை டம்ளர் சுடு தண்ணீர் ஊற்றவேண்டும் நாம் சேர்க்கும் பன்னீர் மிகவும் சாப்டாக இருப்பதற்காக தான் நாம் சுடுதண்ணீர் சேர்க்கிறோம்.

  10. 10

    தேவையான அளவு உப்பு சேர்த்த பிறகு 200 கிராம் பன்னீர் எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை நாம் செய்திருக்கும் மசாலா கலவையில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்

  11. 11

    திரும்பவும் மூடி வைத்து 10 நிமிடம் கழித்து திறந்து பாருங்கள் ரிச்சான கிரீமியான பார்த்தாலே சுவைக்கக் கூடிய மிகவும் ருசியான பன்னீர் பட்டர் மசாலா கிரேவி தயார். பன்னீர் பட்டர் மசாலா கிரேவி நான் உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் பொருத்தமான ஜோடியாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes