சீரக சம்பா மலபார் முட்டை தம்பிரியாணி (Seeraga Samba Malabar egg dumbriyani recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

55 நிமிடங்கள்
  1. 1& 1/2 கப் சீரக சம்பா அரிசி
  2. 5முட்டைகள்
  3. 3வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 2பச்சை மிளகாய்
  6. 1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 5கிராம்பு
  8. 4ஏலக்காய்
  9. 3துண்டு பட்டை
  10. 2 அன்னாசிப்பூ
  11. 1/2 டீஸ்பூன் மிளகு
  12. 2பிஞ்சி இலை
  13. 1/2 டீஸ்பூன் சோம்பு
  14. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  15. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  16. 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
  17. 1/2 கப் தயிர்
  18. தேவையான அளவுஉப்பு
  19. 4டேபிள் ஸ்பூன் நெய்
  20. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  21. மல்லி புதினா

சமையல் குறிப்புகள்

55 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை கழுவி பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்

  2. 2

    முட்டையை வேகவைத்து தோல் உரித்து இரண்டாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.

  4. 4

    வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,மல்லி இலை எல்லாம் நறுக்கி வைத்துக் கொள்ளவும். மசாலா பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.

  5. 5

    ஒரு வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    ஸ்டவ்வில் தவாவை வைத்து மசாலாப் பொருள்களை வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸியில் சேர்த்து பவுடர் செய்து தயாராக வைக்கவும்.

  7. 7

    ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய்,எண்ணெய் ஊற்றி அதில் கிராம்பு, ஏலக்காய்,பட்டை,பிரிஞ்சி இலை, முந்திரி சேர்த்து பொரிந்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து வதக்கவும்.

  8. 8

    இரண்டு நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து கலக்கவும். உடனடியாக தண்ணீரில்,பாதி உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும். ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்தால் அளவு சரியாக இருக்கும்.

  9. 9

    பத்து நிமிடங்கள் வேக விடவும். பின்னர் எடுத்து கலந்து வேறு ஒரு தட்டில் சேர்த்து ஆற வைக்கவும்.

  10. 10

    அதே பாத்திரத்தில் நெய் சேர்த்து பட்டை,கிராம்பு, ஏலக்காய்,முந்திரி சேர்த்து வதக்கி,நறுக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,தனியா தூள், உப்பு சேர்த்து வத்கவும்.

  11. 11

    பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்.

  12. 12

    அத்துடன் தயிர் சேர்த்து கலந்து விடவும்.

  13. 13

    பின்னர் பொடித்து வைத்துள்ள பிரியாணி மசாலா பொடி சேர்த்து கலந்து விடவும்.

  14. 14

    மசாலா கலவையுடன் நறுக்கிய மல்லி,புதினா, வேகவைத்து வைதுள்ள முட்டை துண்டுகளை சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் முட்டையை மசாலா வைத்து மூடி வேக விடவும்.

  15. 15

    பின்னர் முட்டை மசாலாவை வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.

  16. 16

    நான்ஸ்டிக் பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு லேயர் வேக வைத்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து,அதன் மேல் முட்டை மசாலாவை சேர்க்கவும்.

  17. 17

    மேலும் ஒரு லேயர் சாதத்தை சேர்த்து,அதன் மேல் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து,முந்திரி,நெய் தூவி மூடி வைத்து,தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து அதன் மேல் வைக்கவும்.

  18. 18

    பதினைந்து நிமடங்களுக்கு மிதமான சூட்டில் வைத்து எடுத்து கலந்தால் சுவையான சீரக சம்பா அரிசியில் செய்த மலபார் முட்டை தம் பிரியாணி தயார்.

  19. 19

    தயாரான பிரியாணியை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து,வெங்காயம் தக்காளி ரைத்தாவுடன் சுவைக்கவும்.

  20. 20

    இப்போது மிக மிக சுவையான சீரக சம்பா மலபார் தம் பிரியாணி சுவைக்காத்தயார்.

  21. 21

    இது ஒரு நீளமான செய் முறை,ஆனால் சுவை அபாரமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes