பருப்பு உருண்டை குழம்பு

Prasel
Prasel @cook_prasel

பருப்பு உருண்டை குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. பருப்பு உருண்டை
  2. 1 /2 குவளை துவரம் பருப்பு -
  3. 4. சிகப்பு மிளகாய்
  4. 1 /2 டீஸ்பூன். சோம்பு -
  5. - 5 இல் இருந்து கருவேப்பிலை
  6. 5. உப்பு - தேவைக்கு ஏற்ப
  7. 1 / 4 குவளை வெங்காயம் -
  8. 1 தேக்கரண்டி. தேங்காய் -
  9. குழம்பு
  10. 1. புளி - ஒரு எலும்பிச்சை அளவு. மிதமான நீரில்
  11. 15 - 20 நிமிடம் ஊறவிடவும்
  12. 1 டீஸ்பூன். மஞ்சள்தூள் -
  13. 1 தேக்கரண்டி. மிளகாய்த்தூள் -
  14. 2 தேக்கரண்டி. மல்லிதூள் -
  15. 5. உப்பு - தேவையான அளவு
  16. 6. கொத்தமல்லி தழை - அலங்கரிக்க தேவையான அளவு
  17. அரைக்க :
  18. 1 /3 குவளை1. தேங்காய் -
  19. 1 டீஸ்பூன். சோம்பு -
  20. 1 /2 டீஸ்பூன். சீரகம் -
  21. 14. சின்ன வெங்காயம்
  22. 1 / 4 குவளை5. தண்ணீர் -
  23. தாளிக்க:
  24. 2 தேக்கரண்டி. நல்லெண்ணெய் -
  25. 1 உருண்டை2. தாளிப்பு வடகம் -
  26. 3 / 4 டீஸ்பூன். வெந்தயம் -
  27. 10. கறிவேப்பிலை -
  28. 5. சின்ன வெங்காயம் - 5 இரண்டாக நறுக்கி வைக்கவும்
  29. 6. தக்காளி - 1 பொடியாக நறுக்கவும்
  30. 1 / 2 டீஸ்பூன். கடுகு -
  31. 8. பூண்டு - 10 பல் நறுக்கி வைக்கவும்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் துவரம் பருப்பை அரைமணிநேரம் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடிகட்டி அதனுடன் வரமிளகாய், சோம்பு, கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து வாடா மாவு பதத்தில் சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரை வீணாக்க வேண்டாம் அதை தனியாக எடுத்து வைக்கவும், பிறகு தேவைப்படும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், துருவிய தேங்காய் சேர்த்து பிசையவும்.இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைக்கவும். இந்த அளவுக்கு 10 - 12 உருண்டைகள் வரும்.

  2. 2

    ஒரு அகண்ட கடையில் நல்லெண்ணெய் சூடாக்கவும். அதில் கடுகு, தாளிப்பு வடகம், வெந்தயம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாகும்வரை வணக்கவும். பொன்னிறம் அனைத்தும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மாசியும் வரை வணக்கவும்.

  3. 3

    இதில் மிளகிய தூள், மஞ்சள்தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து மசாலா நன்றாக சேரும் வரை வணக்கவும். இத்துடன் புளி தண்ணீர், பருப்பு ஊறவைத்த தண்ணீர் சேர்க்கவும். மேலும் ஒரு குவளை தண்ணீர் சேர்க்கவும். உப்பும் சேர்த்து விடவும். மூடி போட்டு 8 - 10 நிமிடம் மிதமான தீயில் கொதிவிடவும்.

  4. 4

    அது கொதிவரும் சமயத்தில் தேங்காய், சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு மய்ய அரைத்து கொள்ளவும். இதையும் கொதிக்கும் குழம்புடன் சேர்த்து மூடி போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்

  5. 5

    உருட்டி வைக்கப்பட்டுள்ள உருண்டைகளை ஒன்று ஒன்றாக மெதுவாக சேர்க்கவும். அனைத்தையும் ஒரே சமயத்தில் போடவேண்டாம். உருண்டைகள் உடைந்துவிடும் வாய்ப்பு உள்ளது. கிளறவும் வேண்டாம். அணைத்து உருண்டைகளை வெந்தவுடன் மேல எழும்புவிடும். உப்பு சரிபார்த்து கொத்தமல்லி தழை தூவி சூடான சத்தத்துடன் பரிமாறவும்.

  6. 6

    புதிதாக இந்த குழம்பு சமைப்பவர்கள் உருண்டைகள் உடைந்துவிடும் என்று ஐயம் ஏற்பட்டால் அதை முன்னரே இட்லி குவளையில் வைத்து வேக வைத்தும் சேர்க்கலாம். இரண்டும் ஒரே சுவைத்தான் தரும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prasel
Prasel @cook_prasel
அன்று

Similar Recipes