எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2 கப் மணத்தக்காளி வத்தல்
  2. 2மீடியம் சைஸ் பெரியவெங்காயம்
  3. 1மீடியம் சைஸ் தக்காளி
  4. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 3ஸ்பூன் சாம்பார் தூள்
  6. உப்பு தேவையான அளவு
  7. எலுமிச்சை அளவுபுளி
  8. 1குழி கரண்டி நல்லெண்ணெய்
  9. அரைத்துக்கொள்ள
  10. 1ஸ்பூன் எண்ணெய்
  11. 1/2ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  12. 1ஸ்பூன் கடலை பருப்பு
  13. 1,1/2ஸ்பூன் வரக்கொத்தமல்லி
  14. 1/2ஸ்பூன் சீரகம்
  15. 1/2ஸ்பூன் வெந்தயம்
  16. 1/4ஸ்பூன் மிளகு
  17. 1/2கப் தேங்காய் துருவல்
  18. 1/4ஸ்பூன் அரிசி
  19. 4பல் பூண்டு
  20. 1துண்டு இஞ்சி
  21. 3வரமிளகாய்
  22. தாளித்துக் கொள்ள
  23. 1ஸ்பூன் எண்ணெய்
  24. 1ஸ்பூன் கடுகு
  25. 1/2ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  26. 2 வர மிளகாய்
  27. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு கறிவேப்பிலை
  28. 1ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரை கப் மணத்தக்காளி வற்றல் எடுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். 1 மீடியம் சைஸ் தக்காளி பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரை கப் தேங்காய் துருவி வைத்துக் கொள்ளவும். 3 வரமிளகாய், அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, 1,1/2 ஸ்பூன் கொத்தமல்லி, அரை ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் வெந்தயம் கால் ஸ்பூன் மிளகு1/4 ஸ்பூன் அரிசி இவற்றை ஒரு ஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். இத்துடன் நாலு பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இவை ஆறியவுடன் மிக்ஸியில் தண்ணீர் கொஞ்சமாக நீர் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    மணத்தக்காளி வற்றலை எண்ணெய் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு குழி கரண்டி அளவு நல்லெண்ணெயை வாணலியில் ஊற்றி, அது காய்ந்தவுடன் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் மற்றும் வர மிளகாய் கருவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இவை வதங்கிய உடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள்,மூன்று ஸ்பூன் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும் பிறகு கரைத்த புளித்தண்ணீரை சேர்த்து வெங்காயம் தக்காளியை வேக விடவும்.

  4. 4

    வறுத்து வைத்த மணத்தக்காளி வற்றலை சேர்த்துக்கொள்ளவும். இதை ஒரு கொதி கொதித்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக் கொதிக்கவிடவும்.தங்களுக்கு விருப்பமான அளவு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். மணத்தக்காளி வற்றல் குழம்பு தயார்.

  5. 5

    சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். மணத்தக்காளி வற்றல் வயிற்றுக்கு நல்லது. வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுப் பூச்சித் தொந்தரவு இருக்காது.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes