தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப் ரவை
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 2பச்சை மிளகாய்
  5. 1கேரட்
  6. 10பீன்ஸ்
  7. 1கொத்து கறிவேப்பிலை
  8. 1\2ஸ்பூன் கடுகு, உளுந்து
  9. 1ஸ்பூன் இஞ்சி துருவல்
  10. 1ஸ்பூன் நெய்
  11. 21\2கப் தண்ணீர்
  12. 1\2ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் கடுகு, உளுந்தை தாளித்து பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    பிறகு கறிவேப்பிலை இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி, வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    பிறகு காய்களையும் சேர்த்து நன்கு வதக்கி விட்டு 1கப் ரவை க்கு 21\2 கப் தண்ணீர் சேர்க்கவும். மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது கொதி வந்து காயை 5 முதல் 7 நிமிடங்கள் வேகவிடவும்

  4. 4

    இதற்கிடையில் மற்றொரு கடாயில் ரவையை நெய் விட்டு குறைந்த தணலில் வைத்து 2 நிமிடங்கள் வறுத்து ஆறவிடவும்

  5. 5

    இப்போது தண்ணீர் நன்கு கொதித்து காய்கள் வெந்த பிறகு ரவையை சிறிது சிறிதாக தூவி விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்

  6. 6

    ரவை நன்கு வெந்ததும் கிளறி விட்டு கிச்சடி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes