தக்காளி பீட்ரூட் மாங்காய் சட்னி(Tomoto, beetroot, and raw mango chutney)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#cf4
குழந்தைகள் விரும்பும் வகையில், கண்களை கவரும் வகையில், சுவையில் மிஞ்சும் வகையில், அதேசமயம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் ஒரு சுவையான ரெட் கலர் சட்னி. எப்படி இருக்குமோ என்று முயற்சி செய்து பார்த்தேன் மிக மிக அருமையாக இருந்தது. சூடான இட்லிக்கு இன்று காலை சுவையான சட்னி அருமையாக அமைந்தது. தாங்களும் தங்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுவைத்து மகிழும் வகையில் ஒரு முறை செய்து பாருங்கள். நன்றி இங்கனம் மீனா ரமேஷ்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1சிறிய பீட்ரூட்
  2. 4 to 5மீடியம் சைஸ் பழுத்த தக்காளி
  3. 2கீற்று மாங்காய் துண்டு
  4. 1/4ஸ்பூன் சீரகத்தூள்
  5. 1ஸ்பூன் வரமிளகாய் தூள்
  6. 1/4ஸ்பூன் சாம்பார் தூள்
  7. 1 ஸ்பூன் தூள் உப்பு அல்லது தங்களது தேவைக்கேற்ப
  8. தாளிக்க:
  9. 1கப் நல்லெண்ணெய்
  10. 1ஸ்பூன் கடுகு
  11. 1ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  12. 1/4 ஸ்பூன் சீரகம்
  13. 1சிட்டிகை வெந்தயம் தேவை என்றால்
  14. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  15. 1/2கைப்பிடி அளவு கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    நன்கு பழுத்த நான்கு அல்லது ஐந்து தக்காளியை கழுவி சுத்தம் செய்து பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். இரண்டு துண்டு மாங்காயை பொடியாக அரிந்து கொள்ளவும்.ஒரு சிறிய பீட்ரூட்டை கழுவி தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும். ஒரு கப் நல்லெண்ணெய் எடுத்து வைத்துக் கொள்ளவும். கால் ஸ்பூன் சீரக தூள், ஒரு ஸ்பூன் வர மிளகாய்தூள், கால் ஸ்பூன் சாம்பார் தூள், ஒரு ஸ்பூன் தூள் உப்பு எடுத்துக் கொள்ளவும். தாளிக்கத் தேவையான கடுகு, சீரகம்,உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    தக்காளி மாங்காய் பீட்ரூட் மூன்றையும் தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துக் முதலில் மாங்காய் பிறகு தக்காளி பிறகு பீட்ரூட் என வரிசையாக தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். இல்லையென்றால் கலர் கலந்துவிடும்.ஒரு நான்-ஸ்டிக் கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், சீரகம், நான்கைந்து வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இவற்றைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அதே வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் நிறுத்திவிட்டு நீதியை சேர்த்து முதலில் தக்காளி விழுதை இரண்டு நிமிடம் வதங்க விடவும். பிறகு மாங்காய் விழுதை சேர்க்கவும். 2 நிமிடம் கழித்து பீட்ரூட் விழுது சேர்க்கவும். இவை மூன்றும் நன்றாக கலந்துவிட்டு மூன்று நிமிடம் வரை மூடி வைத்து மிதமான தீயில் வைத்திருக்கவும். பிறகு வரமிளகாய்த்தூள்,சாம்பார் தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் மூடி வைத்து 5 நிமிடம் வரை வைத்திருக்கவும்.

  4. 4

    பிறகு நன்கு கலந்து விட்டு என்னை பிரிந்து வந்து விட்டதா என்று பார்த்து விட்டு அடுப்பை நிறுத்தி விடவும். மீதமுள்ள நல்லெண்ணெய்யை சட்னியில் சேர்த்து கலந்து. மேலே தாளிப்பு களை சேர்த்து அலங்கரிக்கவும். சூடான இட்லிக்கு தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பு: மாங்காய் சேர்ப்பதால் புளி சேர்க்க தேவையில்லை. மாங்காய் இல்லை என்றால் ஆம்சூர் துளை கூட சேர்த்து செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes