தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  1. துவரம்பருப்பு ஒரு கப்
  2. சிறியவெங்காயம் 12
  3. தக்காளி-1
  4. புளி ஒரு நெல்லிக்காய் அளவு
  5. துருவிய தேங்காய் 2 ஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்
  6. பூண்டு 4 பல் சீரகம் அரை ஸ்பூன் வெந்தயம் அரை ஸ்பூன்
  7. வரமிளகாய் 2 ஆயில் 3ஸ்பூன் கடுகு கொத்தமல்லி இலை கருவேப்பிலை
  8. உப்பு தேவையான அளவு
  9. பெருங்காயத்தூள் சிறிதளவு
  10. நெய் ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    துவரம்பருப்பு ஒரு கப் வேக வைக்கவும். இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் வரமிளகாய் சிறிய வெங்காயம் நான்கு பல் பூண்டு அரை ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் கடுகு கருவேப்பிலை எடுத்துவைக்கவும் புளி கரைத்து வடிகட்டி வைக்கவும்.

  2. 2

    வாணலில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு ஒரு ஸ்பூன் வெந்தயம் அரை ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் சேர்த்து தாளிக்கவும்.வரமிளகாய் 2 பெருங்காயம் ஒரு சிட்டிகை சேர்த்து துருவிய தேங்காய் இரண்டு ஸ்பூன் சேர்த்து வதக்கவும். தேங்காய் வறுபட்டதும் வெங்காயம்பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும் வதங்கியதும் தக்காளி பொடியாக அரிந்து சேர்த்து வதக்கவும்

  3. 3

    சாம்பார் பொடி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு வெந்த பருப்பையும் சேர்த்து வேக விடவும். வெங்காயம் வெந்ததும் தேவையான புளியை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் இறக்கவும். நெய் ஒரு ஸ்பூன் விட்டு.கொத்தமல்லி இலை தூவி மூடி வைக்கவும் சுவையான வெங்காய சாம்பார் தயார்.தேங்காய் வறுத்து சேர்த்ததால் அரைத்து விட்ட சாம்பார் போல சுவையாக இருக்கும். சூடான இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும் நீங்களும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes