சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பவுலில் கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து மாவு காய்ந்து போகாமல் இருக்க மாவு மேல் எண்ணெய் தடவி மூடி வைத்து கொள்ளவும்.
- 2
முள்ளங்கியை தோள் சீவி கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை கைகளால் நன்கு தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து துருவிய முள்ளங்கி, கறிவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரமசாலா, சீரகத்தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 4
பிறகு சப்பாத்தி மாவை ஓரளவு மீடியமான அளவு உருண்டையாக உருட்டி அதை லேசாக தேய்த்து அதன் நடுவில் வதக்கி வைத்த முள்ளங்கியை 2 ஸ்பூன் அளவு வைத்து மூடி நன்கு உருண்டையாக உருட்டி கொள்ளவும்.
- 5
பிறகு இந்த உருண்டையை கோதுமை மாவில் பிரட்டி கட்டையில் வைத்து சப்பாத்தி போல திரட்டி எடுத்து கொள்ளவும். உள்ளே வைத்து உள்ள ஸ்டவ் வெளியே வராமல் பதமாக தேய்த்து எடுத்து கொள்ளவும்.
- 6
அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் எண்ணெய் ஊற்றி அதன் மேல் ஒவ்வொரு சப்பாத்தியை போட்டு தேவையான அளவு எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான முள்ளங்கி பராத்தா தயார். நன்றி
Similar Recipes
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு வடை
#goldenapron3#book#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் உளுத்தம்பருப்பு இல்லாமல் உருளைக்கிழங்கு பயன்படுத்தி வடை செய்துள்ளேன். குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும் போது இந்த வடை மிகவும் எளிதாக செய்து விடலாம். எதையும் ஊற வைக்க தேவை இல்லை. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உருளைக்கிழங்கில் செய்தது என்று உளுந்து வடை போன்றே இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரெட் ஊத்தப்பம்
#lockdown1இட்லி, தோசை மாவு காலியாகி விட்டால் பிரெட் பயன்படுத்தி இந்த ஊத்தப்பம் சுலபமாக செய்து விடலாம். அதுமட்டுமல்ல தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாற்றத்திற்கு இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
-
பேரிச்சம்பழ பராத்தா
#குழந்தைகள் டிபன் ரெசிபிஇரும்பு சத்து நிறைந்த பேரிச்சம்பழத்தை சேர்த்து செய்த பராத்தா இது. இது குழந்தைகளுக்கு ஏற்ற வித்யாசமான, ஆரோக்கியமான டிபன் ஆகும். Sowmya Sundar -
முள்ளங்கி கேரட் ஜூஸ்
#குளிர்#bookமுள்ளங்கி கேரட்டில் பல நண்மைகள் உள்ளன .நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .இதயம் வலு பெரும்.சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் .சுவாச பிரச்ச னைகள் நீங்கும் .நாம் இந்த காய்கறிகளில் ஜூஸ் செய்து பருகலாம் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்