ரேஷ்மி பனீர்🧀🌶️

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#golden apron3 #book #immunity
பால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍

ரேஷ்மி பனீர்🧀🌶️

#golden apron3 #book #immunity
பால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 15 துண்டுகள் பனீர்
  2. அரை பெரிய வெங்காயம்
  3. அரை குடைமிளகாய்
  4. ஒரு தக்காளி
  5. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. ரெண்டு ஸ்பூன் எணணெய்
  7. ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  8. ஒரு டீஸ்பூன் சீரகம்
  9. அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. முக்கால் டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
  11. அரை டீஸ்பூன் கொத்தமல்லித் தூள்
  12. கால் டீஸ்பூன் சீரகத் தூள்
  13. ஒரு கப் அரைத்த தக்காளி விழுது
  14. கால் கப் அரைத்த முந்திரி விழுது
  15. கால் கப் தண்ணீர்
  16. அரை டீஸ்பூன் உப்பு
  17. ரெண்டு டேபிள்ஸ்பூன் மில்க் க்ரீம்
  18. அரை டீஸ்பூன் கரம் மசாலா
  19. பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாதி பெரிய வெங்காயம், பாதி குடைமிளகாய், ஒரு தக்காளி மூன்றையும் தனித்தனியாக நீளவாக்கில் சன்னமாக அறிந்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது தயார் செய்து கொள்ளவும். பத்து முந்திரியை சுடுதண்ணீரில் ஊறவைத்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். பனீரை நீளவாக்கில் 15 துண்டுகள் தயார் செய்து கொள்ளவும். மசாலா தூள்களை மேற் கூறிய அளவுக்கு எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு முழு தக்காளியை மிக்ஸியில் அடித்து விழுதாக்கிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சூடாக்கி அதில் முதலில் வெங்காயத்தை சேர்க்கவும், பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதங்கியபின், நீளமாக அரிந்த குடமிளகாய், மற்றும் தக்காளியை சேர்த்துக் கொள்ளவும். மீண்டும் ஒரு நிமிடம்வதக்கிக் கொள்ளவும். நீண்ட நேரம் வதக்கக் கூடாது. லேசாக நிறம் மாறிய பின் இவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    மீண்டும் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சூடாக்கி, மிதமான தீயில் அதில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்கவும் பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், முக்கால் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், கால் ஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் கொத்தமல்லித்தூள் சேர்க்கவும். நன்கு வாசம் வரும் வரை கரண்டியில் கிளறிவிடவும். பிறகு அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். எல்லாவற்றையும்மிதமான தீயில் செய்யவும்.

  4. 4

    பச்சை வாசம் போகும் வரை தக்காளி வதங்கியபின், மிதமான தீயில் முந்திரி விழுதை சேர்த்து நன்கு கிளறவும். இந்த கலவை நன்கு கெட்டியானவுடன் என்னை பிரியும். பிறகு கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அல்லது தேவைக்கு தகுந்தாற் போல் தண்ணீர் சேர்க்கவும் அதனுடன் அரை டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். இரண்டு நிமிடம் நன்கு கலந்து விடவும். அதனுடன் வதக்கி வைத்த வெங்காயம் குடமிளகாய் தக்காளி கலவையை சேர்க்கவும். பனீர் துண்டுகளை சேர்த்து கரையாமல் கலந்து விடவும்

  5. 5

    5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். பிறகு அதனுடன் க்ரீமை சேர்க்கவும்.நன்கு கலந்து விட்டு பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து விடவும். கடைசியாக அரை ஸ்பூன் கரம் மசாலா தூளை சேர்த்து நன்கு கலந்து விடவும். பன்னீர் கரையாமல் மிதமாக கலந்து விடவும்.

  6. 6

    மிகவும் சுவையான ரேஷ்மி பன்னீர் இப்போது தயார். சப்பாத்தி, நான், தந்தூரி ரொட்டி வகைகளுடன் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes