கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#wt2
ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள்.

கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)

#wt2
ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 கப் தட்ட பயறு(காராமணி)
  2. 5 பிஞ்சு கத்தரிக்காய்
  3. 6 துண்டுகள் மஞ்சள் பூசணிக்காய்
  4. எலுமிச்சை அளவுபுளி
  5. 1/4t.ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 2டீஸ் ஸ்பூன் சாம்பார் தூள்
  7. 1டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. தேவையான அளவுஉப்பு
  9. அரைக்க
  10. 1டீ ஸ்பூன் எண்ணெய்
  11. 4 வரமிளகாய்
  12. 2டீ ஸ்பூன் வர கொத்தமல்லி
  13. 1டீ ஸ்பூன் கடலை பருப்பு,
  14. 1/2டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  15. 1/2டீ ஸ்பூன் சீரகம்
  16. 1/4டீ ஸ்பூன் வெந்தயம்
  17. 1/4 கப் தேங்காய் துருவல்
  18. 1ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லம்
  19. தாளிக்க
  20. 1டீ ஸ்பூன் எண்ணெய்
  21. 1டீ ஸ்பூன் கடுகு
  22. 1டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  23. 1/2டீ ஸ்பூன் வெந்தயம் பெருங்காயப் பொடி
  24. 2 வர மிளகாய்
  25. சிறிதளவுகருவேப்பிலை கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் தட்டை பயிரை வெறும் வாணலியில் லேசாக சூடு ஏற வறுத்து கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை குக்கரில் 4 அல்லது 5 சவுண்டு விட்டு வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.கத்திரிக்காய் இன்னும் ஏதாவது காய்கள் இருந்தால்(எங்கள் வீட்டில் பூசணிக்காய் இருந்தது) கத்தரிக்காய் பூசணிக்காய் சேர்த்து படத்தில் காட்டியுள்ளபடி அறிந்துகொண்டேன். எப்போதும் கத்திரிக்காயை அரிசி கழுவிய தண்ணீரில் அறிந்து போட்டால் கசக்காது.

  2. 2

    இப்போது அரைப்பதற்கு தேவையான வர மிளகாய் கடலைப்பருப்பு வரக்கொத்தமல்லி கொஞ்சம் உளுத்தம்பருப்பு சீரகம் மற்றும் தேங்காய் வெந்தயம் இவற்றை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை பழம் அளவு புளியை ஊறவைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு இரண்டு காய்களையும் லேசாக வதக்கி விட்டு அதில் அரிசி கழுவிய மூன்றாவது தண்ணீரை சேர்த்து சாம்பார் தூள் மற்றும் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.கொதி வரும் போது மீதி நல்லெண்ணெயை ஊற்றவும். காய்கள் வெந்தவுடன் புளித்தண்ணீரை ஊற்றி தட்டை பயறை சேர்த்துக் கொதிக்கவிடவும்.

  4. 4

    இதற்கிடையில் தேங்காய் சேர்த்து வறுத்த பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும்.புளித்தண்ணீரில் காய் நன்கு கொதித்த பிறகு இந்த அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இவை நன்கு கொதித்தவுடன் வெந்தய பெருங்காயத்தூள் அரை ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும். (அரை கட்டி பெருங்காயத்தை எண்ணெயில் வறுத்து பிறகு அதனுடன் கால் கப் வெந்தயத்தை வறுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.)இந்தப் பொடியை தேவையான பொழுது குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம். ஊறுகாய் செய்யும் போது சேர்த்துக் கொள்ளலாம்.

  5. 5

    கொஞ்சமாக சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு வரமிளகாய் பெருங்காயத் தூள் கரு வேப்பிலைசேர்த்து தாளிக்கவும். கடைசியாக பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும். சாப்பாட்டிற்கு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். குழம்பு மிகுதியாக இருந்தால் சப்பாத்திக்கும் இரவில் தொட்டுக்கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes