பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#nutrient2
விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது.

பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)

#nutrient2
விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4பேர்
  1. 1/4டம்ளர் துவரம் பருப்பு
  2. 1டம்ளர் பச்சை அரிசி
  3. ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளி
  4. 3 ஸ்பூன் அரிந்த கேரட்
  5. 3 ஸ்பூன்அரிந்த பீன்ஸ்
  6. ஒரு முருங்கைக்காய் அரிந்தது
  7. 15 சின்ன வெங்காயம்
  8. 2மீடியம் சைஸ் தக்காளி
  9. 3 ஸ்பூன் பச்சை வேர்க்கடலை
  10. 2ஸ்பூன் ஊற வைத்த கொண்டைக்கடலை
  11. தேவையானஅளவு உப்பு
  12. அரைத்துக் கொள்ள
  13. 4 ஸ்பூன் துருவிய தேங்காய்
  14. 1ஸ்பூன் கடலைப்பருப்பு
  15. 1/2ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  16. ஒரு ஸ்பூன் வரை கொத்தமல்லி
  17. 1/2ஸ்பூன் சீரகம்
  18. 1 ஸ்பூன் வெள்ளை எள்ளு
  19. 1 ஸ்பூன் கசகசா
  20. 4 வர மிளகாய்
  21. 1/2 ஸ்பூன் வெந்தயம்
  22. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  23. கால் ஸ்பூன் விளக்கெண்ணெய்
  24. தாளிக்க
  25. 2ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய்
  26. 1 ஸ்பூன் கடுகு
  27. 1/2 ஸ்பூன் பெருங்காயத் தூள்
  28. 1பட்டை
  29. 2 கிராம்பு
  30. தூய நல்லெண்ணெய்
  31. கறிவேப்பிலை சிறிதளவு
  32. கொத்தமல்லித்தழை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு டம்ளர் அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.காய்கறிகளை நன்கு கழுவி கொஞ்சம் பெரிய சைஸில் அறிந்து கொள்ளவும். பொடியாக அறிந்தால் சாதம் வேகும்போது காய் குழைந்து விடும். 15 சின்ன வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். பின்பு தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கொள்ளவும். கால் டம்ளர் துவரம்பருப்பை மஞ்சள்தூள், 1/4 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரில் 4 சவுண்ட் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    4 வர மிளகாய், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் வரக்கொத்தமல்லி, அரை ஸ்பூன் வெந்தயம், அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் எள்ளு, ஒரு ஸ்பூன் கசகசா இவற்றை ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும். பிறகு அதிலே 4 ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, அதில் ஒரு பட்டை, கிராம்பு சேர்த்து கடுகு பெருங்காயம் தாளித்துக் கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயம்,தக்காளி பொடியாக அரிந்தது சேர்த்து 2 நிமிடம் வதக்கி எல்லா காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். மேலும் இதில் கத்திரிக்காய் பட்டாணி போன்ற காய்கறிகளும் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.

  4. 4

    இப்போது வெந்த துவரம் பருப்பை சேர்க்கவும். பருப்புத் தண்ணீர் ரசதிற்கு வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளலாம். பிறகு ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். நன்கு கலந்துவிட்டு தேவையான உப்பு சேர்க்கவும். ஒரு டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.பருப்புத் தண்ணீர் சேர்த்துக் கொள்வது என்றால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இவகளை நன்கு கலந்து விட்டு குக்கரை மூடி வைக்கவும். 2 விசில் விட்டு பிறகு சிம்மில் மேலும் 10 நிமிடம் வைக்கவும்.

  5. 5

    இப்போது புளியை கரைத்துக் கொள்ளவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து சாதம் குழைய வெந்து விட்டதா என்று பார்க்கவும். பிறகு அதில் புளித்தண்ணீர் சேர்க்கவும்.

  6. 6

    கரண்டியில் நன்கு கலந்து ஒரு 5 நிமிடம் விடவும். கடைசியாக இரண்டு ஸ்பூன் தூய நல்லெண்ணெய் சேர்க்கவும் பிறகு அறிந்த கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும். சாம்பார் சாதத்துடன் வடகம் அல்லது அப்பளம் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes