தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. அரை கிலோபாசுமதி அரிசி
  2. 150 மில்லிநெய்
  3. 1 கப்வெங்காயம்
  4. தலா 2பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை
  5. 50 மில்லிஎண்ணெய்
  6. 2 டீஸ்பூன்இஞ்சி - பூண்டு விழுது
  7. 650 மில்லிதண்ணீர்
  8. 3பச்சை மிளகாய் (கீறியது)
  9. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்றாகக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் - நெய் ஊற்றி... பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலையை தாளிக்கவும்.

  3. 3

    பிறகு, அதனுடன் சின்ன வெங்காயம், இஞ்சி - பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

  4. 4

    தண்ணீர் கொதித்தவுடன், அரிசியைப் போட்டு கிளறி, தண்ணீர் வற்றியவுடன் பாத்திரத்தை இறக்கவும்.

  5. 5

    பிறகு 'தம்’ போடவும் (அடுப்பின் மேலே தோசைக்கல்லை வைத்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, மூடிய பாத்திரத்தை தோசைக்கல்லின்மீது வைத்து, 10 (அ) 15 நிமிடங்கள் வேகவிடவும்).

  6. 6

    பிறகு, சாதத்தை எடுத்து பரிமாறவும். சுவையான நெய் சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalaiselvi
Kalaiselvi @Kalaiselvim
அன்று

Similar Recipes