பூந்தி பக்கோடா குருமா

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.

* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.

*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

#Cookwithfriends

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35-40 நிமிடங்கள்
5-6 பரிமாறுவது
  1. 2 கப் கடலை மாவு
  2. 1/2 கப் அரிசி மாவு
  3. 1/2 டேபிள் ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  4. 8 பச்சை மிளகாய்
  5. 3 பெரிய வெங்காயம்
  6. 3 தக்காளி
  7. 1/2 முடி தேங்காய்
  8. 1 டேபிள் ஸ்பூன் கசகசா
  9. 5 முந்திரி பருப்புகள்
  10. 2 டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகம்
  11. 2பட்டை துண்டுகள்
  12. 2 ஏலக்காய்
  13. 3 கிராம்பு
  14. ஜாதிபத்திரி சிறிதளவு(விருப்பப்பட்டால்)
  15. 2 அன்னாசிப் பூ
  16. 2பிரிஞ்சி இலை
  17. எண்ணெய்-தேவையான அளவு
  18. கொத்தமல்லி,கருவேப்பிலை தேவையான அளவு
  19. உப்பு தேவையான அளவு
  20. மஞ்சள் தூள் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

35-40 நிமிடங்கள்
  1. 1

    பூந்தி செய்வதற்கு:- ஒரு பாத்திரத்தில் அரை கப் கடலைமாவு சிறிதளவு உப்பு மற்றும் தனி மிளகாய் தூள் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து அதன் மேல் ஒரு ஜல்லி கரண்டி பிடித்து கலந்துள்ள மாவை சிறிது சிறிதாக ஊற்றி ஒரு தட்டு தட்டினால் சிறு சிறு பூந்திகளாக விழும் இதனை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பக்கோட செய்வதற்கு:- ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு, கால் கப், அரிசி மாவு,ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, ஒரு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, சிறிதளவு கொத்தமல்லி, கருவேப்பிலை நறுக்கியது,சிறிய இஞ்சி துண்டு மற்றும் 2 பூண்டுப் பற்கள் தட்டிக்கொண்டு 2 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டியாக பிசைந்து ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொண்டால் பக்கோடா தயார்.

  3. 3

    குருமா செய்வதற்கு:- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி,தேங்காய்,இஞ்சி பூண்டு, கசகசா, முந்திரி,பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து ஆறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,ஜாதிபத்திரி, பிரிஞ்சி இலை, மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

  4. 4

    நன்கு கொதித்து பிறகு பொரித்து வைத்துள்ள பூந்தி மற்றும் பக்கோடாவை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் கமகமக்கும் வாசனையுடன் சுவையாக பூந்தி பக்கோடா குருமா தயார். இதனை கலந்த காய்கறி பிரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் அலாதியாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes