எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
இரண்டு நபர்கள்
  1. பாசிப்பருப்பு --1 கப்
  2. சர்க்கரை--1 கப்
  3. தேங்காய்த்துருவல் --1/2 கப்
  4. முந்திரி -- 6 அல்லது 7
  5. ஏலக்காய்--2
  6. நெய்--தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    முதலில் பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஊற வைத்த பாசிப்பருப்பை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு அந்த மாவை இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து இட்லி போன்று எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு அவை ஆறியவுடன் நன்கு உதிர்த்துக் கொள்ளவும் தேவைப்பட்டால் மிக்ஸியில் போட்டு உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    ஒரு வாணலியில் 4 ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி உதிர்த்து வைத்துள்ள பாசிப்பருப்பு மாவை சேர்த்து ஐந்திலிருந்து பத்து நிமிடம் வதக்கவும் அவை நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்

  6. 6

    மிக்ஸியில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் அதை வதங்கிய பாசிப்பருப்பு மாவுடன் சேர்க்கவும்

  7. 7

    அதனுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து பரிமாறவும் இப்பொழுது மிகவும் சுவையான காரைக்குடி ஸ்பெஷல் உக்காரை தயாராகிவிட்டது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033
அன்று

Similar Recipes