இட்லி+தக்காளி தொக்கு

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#combo1
சுட சுட இட்லிக்கு தொட்டு கொள்ள சுவையான காம்போ தக்காளி தொக்கு. மிருதுவாக இட்லியும்,சுவையாக தொக்கும் செய்ய போகலாம் வாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

200 gm தொக்கு
1.5 கிலோ மாவு
  1. 1.5படி இத்லி அரிசி
  2. 1/4+2 டேபிள் ஸ்பூன் குண்டு உளுத்தம் பருப்பு
  3. 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  4. தேவையான அளவுஉப்பு
  5. தொக்கு செய்ய
  6. 1 kg பழுத்த நாட்டு தக்காளி
  7. 1 பெரிய எழுமிச்சை அளவு புளி
  8. 15 வர மிளகாய்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 1.5 ஸ்பூன் வெந்தயம்
  11. 2 ஸ்பூன் பெருங்காத்தூள்
  12. 1 கப் எண்ணெய்
  13. 2 ஸ்பூன் கடுகு
  14. 15 பல் பூண்டு
  15. கொஞ்சம்கருவேப்பிலை இலை

சமையல் குறிப்புகள்

200 gm தொக்கு
  1. 1

    1.5 படி அரிசியை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.ஆறு மணி நேரம் கழித்து கால் படிக்கு மேல் 2 டேபிள் ஸ்பூன் அல்லது கூம்பாக உளுத்தம்பருப்பு எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து கழுவி ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    முதலில் உளுந்தை நன்கு பொங்க அரைத்துக் கொள்ளவும்.பிறகு உளுந்து மாவை வழித்து எடுத்து விட்டு அரிசியை கிரைண்டரில் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ரவை பதத்திற்கு கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும்.உளுந்து மாவையும் அரிசி மாவையும் ஒன்றாக சேர்த்து கிரைண்டரில் கழுவிய தண்ணீரை ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும். எட்டு மணி மணி நேரம் வரை புளிக்க விடவும்.

  3. 3

    இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இட்லி தட்டில் ஒரே அளவாக மாவை ஊற்றி எட்டிலிருந்து பத்து நிமிடம் வரை வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

  4. 4

    ஒரு கிலோ நன்கு பழுத்த தக்காளி எடுத்து தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து ஒரு காய்ந்த துணியில் துடைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை நான்காக அரிந்து வைத்துக் கொள்ளவும். பெருங்காயம், வெந்தயம் இரண்டையும் வெறும் வாணலியில் வாசம் வர லேசாக வறுத்துக் கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். மிளகாய் எடுத்து வைத்துக் கொள்ளவும். பூண்டு உரித்து வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    தக்காளி கல் உப்பு மிளகாய் புளி எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

  6. 6

    இந்த தக்காளி விழுதை ஒரு கெட்டியான வாணலியில் வைத்து அடுப்பைப் பற்றவைத்து மிக அதிக தீயில் 5 நிமிடம் வரை மூடி போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் சுண்ட ஆரம்பிக்கும். இப்போது அடுப்பை சிம்மில் வைத்து மீண்டும் மூடி வைத்து தக்காளி தண்ணீர் சுண்டும் வரை வைத்திருக்கவும்.

  7. 7

    இரண்டாவது படத்தில் காட்டியுள்ளபடி தண்ணீர் நன்கு வற்றி சிறிது கெட்டியாகும் வரை சுண்ட வைக்கவும். இப்போது வேறு ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.

  8. 8

    தக்காளி விழுதில் வறுத்து அரைத்த பெருங்காய வெந்தயப்பொடி சேர்த்து கலக்கவும்.பிறகு அதன் மேல் பூண்டை மேலாக வைக்கவும். அதன்மேல் தாளித்த எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் கழித்து நன்கு கலந்து விடவும்.(தங்களுக்கு விருப்பம் என்றால் சிறிது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சேர்த்துக்கொள்ளலாம்.)பிறகு மீண்டும் மூடிக்கொண்டு மூடி வைத்து விடவும்

  9. 9

    நன்கு ஆறிய பிறகு மூடியைத் திறந்து பார்த்தால் எண்ணெய் தனியாக பிரிந்து இருக்கும். இப்போது வேறு ஒரு டப்பாவில் அல்லது பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இருபது நாள் வரை சாப்பிடலாம். வெளியூர் சுற்றுலா செல்லும் போது இதுபோன்று செய்து எடுத்துக் கொண்டு சென்றால் 3, 4 நாள் வரை தாங்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes