விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#RD
விரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4 மணி
10 பேர்
  1. 5 கப்உதிரியாக வடித்த சாதம் (1கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர்)
  2. பெரிய எலுமிச்சை அளவுபுளி
  3. 1 ஸ்பூன்வறுக்க:- தனியா
  4. 1 டீ ஸ்பூன்க.பருப்பு
  5. 1 டீ ஸ்பூன்உ.பருப்பு
  6. 8சி.மிளகாய்
  7. 1 டீ ஸ்பூன்மிளகு
  8. 1 டீ ஸ்பூன்வெந்தயம்
  9. 1 டீ ஸ்பூன்கடுகு
  10. 1 டீ ஸ்பூன்வெள்ளை எள்(கறுப்பு எள்ளும் வறுக்கலாம்)
  11. தாளிக்க:-
  12. 1 டேபிள் ஸ்பூன்ப.வேர்க்கடலை
  13. 1 டீ ஸ்பூன்கடுகு
  14. 1 டீ ஸ்பூன்உ.பருப்பு
  15. 1 டீ ஸ்பூன்க.பருப்பு
  16. 2கீறின ப.மிளகாய்
  17. 3சி.மிளகாய்
  18. 2 ஆர்க்குகருவேப்பிலை
  19. 2 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  20. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  21. 1பெரிய துண்டுவெல்லம்
  22. 1/4 கப்ந.எண்ணெய்
  23. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

3/4 மணி
  1. 1

    சாதத்தை 1 ஸ்பூன் ந.எண்ணெய் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும்.புளியை கெட்டியாக கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை மீடியத்தில் வைத்து வெறும் கடாயில் தனியா, கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, எள்,மிளகாய், வெந்தயம்,மிளகு, ஆகியவற்றை கருகாமல் நன்கு வறுத்து தட்டில் ஆற விடவும்.

  3. 3

    ஆறினதும் மிக்ஸி ஜாரில் போட்டு சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

  4. 4

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், 5 டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய் காய்ந்ததும்,வேர்க்கடலையை போட்டு வறுத்ததும், க.பருப்பு, உ.பருப்பு போடவும்.

  5. 5

    பருப்புகள் சிவந்ததும்,வெந்தயம் போட்டு சிவந்ததும்,கீறின ப.மிளகாய், சி.மிளகாய், உப்பு போடவும்.

  6. 6

    பிறகு ம.தூள், கருவேப்பிலை பொரிந்ததும்,புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

  7. 7

    புளி வாசனை போக கொதித்ததும், வெல்லத்தை நன்கு பொடித்து போடவும்.

  8. 8

    பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து வறுத்த பொடி, 3டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் போட்டு, எண்ணெய் மேலே வர கொதிக்க விடவும்.

  9. 9

    கொதித்து கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விட்டு, வடித்த சாதத்தை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

  10. 10

    சாதத்தை ஒரு பௌலுக்கு மாற்றவும்.மேலே காய்ச்சாத ந.எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு கிளறவும்.இப்போது, சுவையான,*கோவில் புளியோதரை* தயார்.கோவில்களில் இதே முறையில்தான் புளியோதரை செய்வார்கள்.நான் இதை வெண் புழுங்கலரிசியில் செய்துள்ளேன். செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes