சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#MT
“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது” என்பது கேழ்வரகுக்கு மிகவும் பொருந்தும் ஏகப்பட்ட சத்து நிறைந்த சிறு தானியம். புரதம், விட்டமின்கள் B6, K, உலோக சத்துக்கள். நார் சத்து நிறைந்தது. சக்கரை நோய். இரத்த அழுத்தம் இருப்பர்கள் இதை சாப்பிடுவது நல்லது. பட்டு போன்ற மெத்தென்ற தோசை சத்தும், சுவையும் கூடியது. இது ஒரு ஹைபிரிட்; தோசை போல மெல்லியதில்லை, அடை போல தடிமனும் இல்லை, இரண்டிருக்கும் நடுவில். எளிதில் செய்யக்கூடியது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள். #ragi #MT

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 1கப் பச்சரிசி
  2. ½ கப் முழு உளுந்து
  3. ¼ கப் கடலை பருப்பு
  4. 2 மேஜைக்கரண்டி கொள்ளு
  5. 2 மேஜைக்கரண்டி முழு பயறு
  6. 1 தேக்கரண்டி வெந்தயம்
  7. 2 கப் கேழ்வரகு முழு தானியம்
  8. 1 தேக்கரண்டி ஈஸ்ட்
  9. 2கப் ஸ்பினாச் கீரை, பொடியாக நறுக்கியது
  10. 1கப்வெங்காயம் சாப்ட்
  11. 1 அங்குலம் இஞ்சி
  12. 4 பல் பூண்டு
  13. 6உலர்ந்த கார சிகப்பு மிளகாய்
  14. 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
  15. 1 மேஜைகரண்டி சீரகம்
  16. தேவையானஎண்ணை (நல்லெண்ணை)
  17. தேவையானஉப்பு
  18. அடை தோசை

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.

  3. 3

    பெரிய பாத்திரத்தில் 6 கப் நீர் சேர்த்து உளுந்து,வெந்தயம். கடலை பருப்பு, பயறு, கொள்ளு அரிசி ஊறவைக்க.; 6 மணி நேரமாவது ஊறவேண்டும். நான் ஓவெர்நைட் ஊறவைத்தேன்.வடித்து நீர் சேர்த்து பிளேண்டரில் போட்டு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் சேர்த்து சிறிது கொர கொரவென்று அறைக்கவும். முழூ கேழ்வரகு உபயோகித்தால் தனியாக ஊற வைத்து அறைக்கவேண்டும். பின் இரண்டு மாவுகளையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தோசை மாவை பெரிய பாத்திரத்தில் போட்டு ஈஸ்ட் சேர்த்து சுத்தமான கையால் ஒன்றாக கலக்க. 4 மணி நேரத்தில் பொங்கிவிடும்.

  4. 4

    தேவையான உப்பு சேர்த்து கிளறவும், கீரை, சீரகம், பெருங்காயம் சேர்த்து கிளற. மாவு அடை செய்ய தயார்.

    தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, நான் இரும்பு தோசைக் கல்லை உபயோகிப்பேன். சூடான பின், எண்ணை தடவுக எப்பொழுதும் தோசை செய்வது போல 1 கப் மாவில் ஒரு அடை தோசை செய்க. அடை தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றுக. இரண்டு பக்கமும் பிரவுன் ஆக வேண்டும். 2-3 நிமிடங்களில் சுவையான சத்தான வாசனையான அடை தோசை தயார்.

  5. 5

    எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ, அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக. சின்ன பசங்களுக்கு தோசையுடன் ஜாம் சேர்த்து பரிமாறலாம். நான் சாம்பார், தக்காளி சட்னி கூட பறிமாறினேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes