எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4பேர்
  1. ஒரு கப் பச்சரிசி
  2. ஒரு கப் இட்லி அரிசி
  3. ஒரு கப் முழு உளுந்து
  4. ஒரு டீஸ்பூன் வெந்தயம்
  5. ஒரு டேபிள்ஸ்பூன் கல்லுப்பு
  6. 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  7. ஒரு டீஸ்பூன் கடுகு
  8. ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  9. ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  10. ஒரு டீஸ்பூன் மிளகு பொடி
  11. ஒரு டேபிள்ஸ்பூன் சுக்கு பொடி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசி தனியாகவும், உளுந்து வெந்தயம் இவற்றை தனியாகவும் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஊற வைத்த உளுந்தை ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.

  3. 3

    அடுத்து அரிசியை கொரகொரப்பாக அரைக்கவும்.

  4. 4

    கடைசியாக கல்லு உப்பு சேர்த்து இரண்டு மாவையும் கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  5. 5

    இப்பொழுது நன்கு பொங்கி வந்திருக்கும்.

  6. 6

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு சேர்த்து வதக்கி கடைசியாக மிளகுபொடி, சுக்குப்பொடி சேர்த்து மாவில் கொட்டவும்.

  7. 7

    அந்த மாவை நன்கு கலந்து ஒரு கப் அல்லது ஒரு டம்ளர் அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்திலோ ஊற்றி இட்லி பானையில் 15 நிமிடம் வேக வைக்கவும்.

  8. 8

    சுவையான காஞ்சிபுரம் கோவில் இட்லி ரெடி. இதை காரமான தக்காளி தொக்கு உடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

  9. 9

    இதை தொண்ணையிலும் பரிமாறலாம்.நான் மீதி மாவை தட்டி இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்தேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes