தேவையான பொருட்கள்

  1. 2 கப் முருங்கைக் கீரை ஆய்ந்து சுத்தம் செய்தது
  2. 100 மிலி புளித் தண்ணீர்
  3. 1 தக்காளி
  4. 1 தேக்கரண்டி மிளகு
  5. 1/2 தேக்கரண்டி சீரகம்
  6. 5 பற்கள் பூண்டு
  7. 1 மிளகாய் வத்தல்
  8. தாளிக்க
  9. 1 தேக்கரண்டி நெய்
  10. 1/2 தேக்கரண்டி கடுகு
  11. 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  12. 2 மிளகாய் வத்தல் (குண்டு வத்தல்)

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் முருங்கைக் கீரையை தண்ணீர் சேர்த்து வேக வைத்து வெந்ததும் வடிகட்டவும்.

  2. 2

    மிளகு, சீரகம், பூண்டு, மிளகாய் வத்தல் சேர்த்துப் பொடித்தால் ரசப்பொடி தயார்.

  3. 3

    முருங்கைக் கீரை வேகவைத்த நீர் இரண்டு கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் தக்காளி, புளித்தண்ணீர், அரை கப் தண்ணீர், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

  5. 5

    புளி வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள ரசப்பொடி, வேக வைத்த முருங்கைக் கீரை நீர் சேர்த்து நுரைத்து வரும் போது இறக்கவும்.

  6. 6

    நெய்யில் கடுகு, வெந்தயம், முழு மிளகாய் வத்தல் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

  7. 7

    சூடான சாதத்துடன் சேர்த்துப் பரிமாறவும்.

  8. 8

    இந்த ரசம் சளி, இருமல், தொண்டை வலியைத் தீர்க்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes