தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. ஒரு கப் வால்நட்
  2. ஒரு கப் கடலை மாவு
  3. கால் கப் அரிசி மாவு
  4. 2வெங்காயம் நீளமாக நறுக்கியது
  5. 3பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  6. ஒரு துண்டு இஞ்சி துருவியது
  7. அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. சிறிதுகருவேப்பிலை
  10. சிறிதுகொத்தமல்லி
  11. தேவையான அளவுஉப்பு
  12. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பேசினில் கடலை மாவு, அரிசி மாவு, வால்நட், மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இவைகளை சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது அதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சூடான எண்ணெயில் ஒரு டேபிள்ஸ்பூன் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெயை வைத்து பிசைந்த மாவை கொஞ்சமாக பக்கோடா போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  5. 5

    சுவையான வால்நட் பக்கோடா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes