கேரட் முள்ளங்கி சாம்பார்🥕

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#கேரட
கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பேர்
  1. ஒரு கப் துவரம்பருப்பு
  2. ஒரு பெரிய கேரட்
  3. ஒரு பெரிய முள்ளங்கி
  4. ஒரு பெரிய தக்காளி
  5. 15 சிறியவெங்காயம்
  6. அல்லது
  7. ஒரு பெரிய வெங்காயம்
  8. ஒரு பச்சை மிளகாய்
  9. 3 ஸ்பூன் சாம்பார் தூள்
  10. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. உப்பு தேவையான அளவு
  12. ஒரு சிறிய எலுமிச்சங்காய் அளவு புளி
  13. தாளிக்க
  14. ஒரு ஸ்பூன் எண்ணெய்
  15. ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்
  16. கால் ஸ்பூன் விளக்கெண்ணெய்
  17. ஒரு ஸ்பூன் கடுகு
  18. அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  19. கால் பெருங்காயத்தூள்
  20. ஒரு காய்ந்த மிளகாய்
  21. ஒரு இணுக்கு கருவேப்பிலை
  22. 2 ஸ்பூன் பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    படத்தில் காட்டியவாறு முள்ளங்கி மற்றும் கேரட்டை வட்டமாக அறிந்து கொள்ளவும். வெங்காயத்தை அறிந்து கொள்ளவும். தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு கப் துவரம் பருப்பை கழுவி குக்கரில் தண்ணீர் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் கொஞ்சமாக கால் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். 4 விசில் விட்டு நங்கு வேக வைத்துக் கொள்ளவும். ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பெரிய வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அரிந்த வெங்காயத்தையும் ஒரு பச்சை மிளகாயும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அதனுடன் முதலில், அரிந்த முள்ளங்கியை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன் பிறகு கேரட் சேர்க்கவும். பிறகு 3 ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து உடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்கு கரண்டியால் கலந்து விடவும்.

  3. 3

    ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டுஅதனுடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து குக்கரை மூடி இரண்டு சவுண்ட் வரும் வரை காய்கறிகளை வேக விடவும். பிறகு அதனுடன் வெந்த பருப்பை சேர்த்து ஒரு கொதி விடவும். குழம்பு நன்கு கொதித்தவுடன் கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்த்து மீண்டும் ஒரு கொதி கொதிக்க விடவும்.

  4. 4

    புளித்தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போனவுடன் நன்கு கலந்துவிட்டு. ஒரு எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும்.பொடியாக அரிந்த கொத்தமல்லி தழையை கடைசியாக குழம்பில் சேர்க்கவும். சுவையான கேரட் முள்ளங்கி சாம்பார் ரெடி. சாப்பாட்டிற்கும், காலை உணவு இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். நாங்கள் இன்று காலை டிபன் வெண் பொங்கலுக்கு தேங்காய் சட்னியுடன் கேரட் முள்ளங்கி சாம்பார் சேர்த்து தொட்டு சாப்பிட்டோம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes